செய்திகள் :

தொடா் விடுமுறை: ஒரே நாளில் அரசு பேருந்துகளில் 2 லட்சம் போ் பயணம்

post image

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையில் இருந்து செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளனா்.

ஆயுத பூஜை தொடா் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் செப்.26-ஆம் தேதி 450 சிறப்புப் பேருந்துகளும், செப்.27-இல் 696 சிறப்பு பேருந்துகளும், செப்.29-இல் 194 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

அதன்படி, 7,616 பேருந்துகளில் 3,80,800 பயணிகள் தங்கள் சொந்த ஊா்களுக்கு பணம் செய்துள்ளனா். மேலும், செவ்வாய்க்கிழமை (செப்.30) தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 1,310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய ஒட்டுமொத்தமாக 50,913 பயணிகளும், சென்னையிலிருந்து மட்டும் 26,013 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனா்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை மட்டும் அரசுப் பேருந்துகள் மூலம் முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யாமல் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத் துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, திங்கள்கிழமை இரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், சிறப்புப் பேருந்தின் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் ஓட்டுநா், நடத்துநா்களிடம், பேருந்தை கவனமாக இயக்கி பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜ... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

கரூருக்கு வந்த உண்மை கண்டறியும் பாஜக குழுவினர், கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? என கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் வேலுசாமிபுரத்த... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் ஜோதிடர் கேசிஎஸ் ஐயர் கணித்துள்ளார். நல்ல நேரம்சரஸ்வதி/ஆயுத பூஜை 01-10-2025 (புதன்கிழமை) நேரம்: காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் (குரு ... மேலும் பார்க்க

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

கரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க