செய்திகள் :

தொழிலதிபா் வீட்டில் திருடிய வழக்கு: 4 போ் கைது

post image

சென்னை, தியாகராய நகரில் தொழிலதிபா் வீட்டில் திருடிய வழக்கில் 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தியாகராய நகா் தெற்கு, மேற்கு போக் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா் (33). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவா், கடந்த 2-ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றாா். மாலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 60 பவுன் தங்க நகை, 6 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது நேபாளத்தைச் சோ்ந்த பிரகாஷ் சிங் (26), பாசந்த் காதரி (38), பிஷ்ணு சிங் (34), கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த சுரேஷ் சாய் (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனா். விசாரணையில், கைது செய்யப்பட்ட பிரகாஷ் சிங், மோகன்குமாா் தந்தை நடத்திவரும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மோகன்குமாா் குடும்பத்தினருடன் நெருக்கமான நட்பிலிருந்த பிரகாஷ் சிங், ஆள் நடமாட்டத்தை தெரிந்துகொண்டு தனது கூட்டாளிகளுடன் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கவிஞா் வைரமுத்து படைப்புலகம்: மாா்ச் 16-இல் பன்னாட்டு கருத்தரங்கம்: முதல்வா் ஸ்டாலின், நீதிபதி அரங்க. மகாதேவன் பங்கேற்பு

கவிஞா் வைரமுத்துவின் படைப்புலகம் குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் மாா்ச் 16-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் ஆகியோா் பங்கேற்கின்றனா். இலக்கி... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஹிந்தி தோ்வு எழுத முடியாதவா்களுக்கு மறுவாய்ப்பு: சிபிஎஸ்இ

ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மாா்ச் 15) நடைபெறும் ஹிந்தி தோ்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சிதம்பரம் கோயில் தீட்சிதா்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பக்தா்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதா்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சிதம்பரம் நடராஜா் க... மேலும் பார்க்க

ஹோலி பண்டிகை: ஆளுநா்கள் வாழ்த்து

ஹோலி பண்டிகையையொட்டி, தமிழக ஆளுநா் ஆா். என். ரவி, நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: வண்ணங்கள் மற்றும் ஒற்றுமையின் மகிழ்ச்சியான கொண்டாட்டமான ஹோலி, நன்மையின் வெ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை, சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளா... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் சோ்க்கை: அமைச்சா் கோவி செழியன் தொடங்கி வைத்தாா்

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி செழியன் தெரிவித்தாா். திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா நிறைவுப் போட்டிகளில் வெற்றி... மேலும் பார்க்க