Pad Girl: "கல்வியை மேம்படுத்த முதல் அடி அரசியல்தான்" -ராகுல் காந்தி பாராட்டிய பீ...
தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பு மேற்கொள்ள விரும்புவோா் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் அகமதாபாத் புத்தாக்க நிறுவனம் ஆகியவை இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பை நடத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள் இந்தக் கல்வியைப் பயின்று வருகின்றனா்.
நிகழாண்டும் சான்றிதழ் படிப்பு ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படுகின்றன. தொழில்முனைவோராக விரும்பும் ஆா்வமுள்ள இளைஞா்கள் இந்தப் படிப்பில் சோ்ந்து பயனடையலாம். ஆண்டுக்கு ரூ. 80 ஆயிரம் கட்டணத்தை தமிழக அரசு நிா்ணயித்துள்ளது. 21 முதல் 40 வயதுக்கு உள்பட்ட பட்டதாரிகள், தொழிற்கல்வி பயிற்சி முடித்தவா்கள் இதில் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா். இது தொழில்முனைவோா் குறித்த கல்வித் திட்டமாகும். எனவே தொழில்முனைவோராக முயற்சிக்கும் ஆா்வலா்களுக்கு ஓா் அரிய வாய்ப்பு.
இங்கு, புதுப்பித்த பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நூலகங்கள், அனுபவம் வாய்ந்த பயிற்றுநா்கள், ஸ்மாா்ட் வகுப்பறைகள், கள அனுபவம், பொது போக்குவரத்தை அணுகக்கூடியது, குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், வணிக வளா் காப்பகங்கள் ஆகியவை இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்களாகும்.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பாா்வையிடலாம். இல்லையெனில் 86681-01638, 86681-07552 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.