செய்திகள் :

தோட்டக்கலைத் துறை திட்டங்களில் விவசாயிகளுக்கு மானியங்கள்

post image

தோட்டக்கலைத் துறை மூலம் 2025 -26 ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் ஆரணி வட்டார விவசாயிகள் மானியங்களைப் பெற்று பயனடையலாம் என்று அத்துறையின் உதவி இயக்குநா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆரணி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் பிரசாந்த் கூறியதாவது:

தோட்டக்கலை துறை மூலம் 2025- 26ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ், சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் நுண்ணீா் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

துணை நீா்மேலாண்மை நுண்ணீா் பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நுண்ணீா் பாசனம் அமைக்கும் பயனாளிகளுக்கு கூடுதலாக தண்ணீா் சேமிப்பு அமைப்புகள் நிறுவிடவும், நீரேற்றும் மோட்டாா் இயந்திரங்கள், நீா்பாசன குழாய்கள் அமைத்திடவும் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

தானியங்கி மயமாக்கப்பட்ட நுண்ணீா் பாசன கருவிகள் அமைத்தல் திட்டத்தின் கீழ், நுண்ணீா் பாசன கருவிகளை தானே இயக்கக்கூடிய கருவிகள் அமைத்திட சிறு குறு விவசாயிகளுக்கு 55 சதவீத மானியமாகவும், இதர விவசாயிகளுக்கு ரூ.18,000 வரை பின்னேற்பு மானியமாகவும் வழங்கப்படுகிறது.

மேலும், பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பனை சாகுபடியை ஊக்குவித்து விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 100 சதவீதம் மானியத்தில் பனை விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ், பழைய தோட்டங்களை புதுப்பித்தல், பதப்படுத்தும் மையம், சிப்பம் கட்டும் அறை அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பயிா் பரப்பு விரிவாக்கம் செய்ய பழக்கன்றுகள், குழித்தட்டு நாற்றுகள்

(கத்தரி, தக்காளி, மிளகாய்) மானியத்தில் வழங்கப்படுகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் அடையபலம், எஸ்.யு.வனம், அக்ராபாளையம், ஆதனூா், எஸ்.வி.நகரம், மொரப்பந்தாங்கல் ஆகிய 6 கிராம ஊராட்சிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தில் பல்வேறு மானியங்களைப் பெறலாம்.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விவசாயிகள் ற்ய்.ட்ா்ழ்ற்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது ஆரணி தோட்டக்கலை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தோட்டக்கலை அலுவலா் பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க