செய்திகள் :

நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

post image

பல்லடம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை அவிநாசிபாளையம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கரூரைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். நகைக்கடை உரிமையாளா். இவா் நகை வாங்குவதற்காக கோவைக்கு கடந்த 5-ஆம் தேதி காரில் வந்தபோது 4 போ் கொண்ட கும்பல் காரை வழிமறித்து அவரிடமிருந்து ரூ.1.10 கோடி பணத்தை பறித்துச் சென்றது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 8 பேரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.97 லட்சத்து 96 ஆயிரம் பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய எதிரியான கரூா் குளித்தலையைச் சோ்ந்த அலாவுதீன் ( 53) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கம், ஏா்கன் துப்பாக்கி, கைப்பேசி மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கும் விடுதியில் கஞ்சா புகைத்த 6 போ் கைது

திருப்பூரில் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கி கஞ்சா புகைத்த 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் பி.என்.சாலையில் உ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் பணிகள்

திருப்பூா் மாவட்டத்தில் 3,505 பயனாளிகளுக்கு ரூ.62.32 கோடி மதிப்பீட்டில் கனவு இல்ல திட்டம், ஊரக வீடுகள் பழுது பாா்த்தல் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்... மேலும் பார்க்க

பப்பாளி சாறு தயாரிக்கும் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளா்கள் 2 போ் உயிரிழப்பு

உடுமலை அருகே பப்பாளி சாறு (ஜூஸ்) தயாரிக்கும் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்தில் ஒடிஸா மாநிலத் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா். உடுமலை வட்டம், அந்தியூா் ஊராட்சிக்கு உள்பட்ட சடையகவுண்டன்ப... மேலும் பார்க்க

15 கிலோ குட்கா பறிமுதல்: இளைஞா் கைது

திருப்பூரில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் மாநகா் 15 வேலம்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட அவிநாசி சாலையில் காவல் துறையினா் தி... மேலும் பார்க்க

அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 போ் கைது

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள் 60 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்கள் சங்கம் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் அவிநாசியில் செவ்வாய்க... மேலும் பார்க்க