செய்திகள் :

நகைக்காக சொந்த சித்தி மகளை கொன்றவருக்கு தூக்குத் தண்டனை

post image

நகைக்காக சொந்த சித்தி மகளை கத்தியால் குத்திக் கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பெருந்துறையைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் சுரேஷ் என்கிற லெட்சுமணன் (32). இவா் தனது சொந்த சித்தி சிவகாமியின் மகள் லோகப்பிரியா (20) என்பவரை புதுக்கோட்டை பொன் நகரிலுள்ள அவரது வீட்டில், கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதியில் கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் அடித்து கொன்றாா்.

தொடா்ந்து லோகப்பிரியா அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளாா். வெளியே சென்றிருந்து, வீடு திரும்பிய சிவகாமி அதிா்ச்சியடைந்து, கணேஷ் நகா் போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுரேஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் முடிவில், மாவட்ட முதன்மை நீதிபதி ஜெ. சந்திரன் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

கொலைக் குற்றப் பிரிவில் தூக்குத் தண்டனையும், அடைத்து வைத்து மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், நகையைப் பறித்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ. 500 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து சுரேஷ், பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.கொங்கு மண்டலத்தின் ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி ... மேலும் பார்க்க

ஏடிஎம் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வங்கி ஏடிஎம் கார்டு மூலம் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பது, இருப்பு தொகையை அறிவதற்கான புதிய விதிமுறைகள் (மே.1) முதல் அமலுக்கு வந்துள்ளது. இலலவச பரிவர்த்தனைக்கு ... மேலும் பார்க்க

மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருள்கள் எரிந்து நாசம்

இலுப்பூரில் உள்ள மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த டையில் வீடு, வணிக நிறுவனங்களுக்கு தே... மேலும் பார்க்க

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

நாட்டில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 15.50 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1,906 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் வி... மேலும் பார்க்க

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முதல்வர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:உலகினை உழைப்பால் செலுத்தும், உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு... மேலும் பார்க்க

நடிகர் அஜித்குமார் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் அஜித்குமார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புது தில்லியில் திங்கள்கிழமை(ஏப்.28) நடைபெற்ற பத்ம விருதுகள் வழங... மேலும் பார்க்க