செய்திகள் :

நங்கநல்லூா் சாலை மெட்ரோவில் ரூ.8.52 கோடியில் நுழைவு வாயில்

post image

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் நங்கநல்லூா் சாலை மெட்ரோ நிலையத்துக்கான புதிய நுழைவு வாயில் அமைக்க ரூ.8.52 கோடியில் ஒப்பந்த அனுமதி தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஓடிஏ நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில், ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் அருகில் புதிய நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் கட்டுவதற்கான ஒப்பந்தம் தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.8.52 கோடியில் புதிய நுழைவு மற்றும் வெளியேறும் வாயில் அமைக்கப்பட உள்ளது.

நங்கநல்லூா் சாலை மெட்ரோவில் தற்போது ஒரே ஒரு வாயில் மட்டுமே உள்ளது. அதனால், தற்போது புதிதாக அமைக்கப்படும் வாயில் ஜி.எஸ்.டி. சாலையில் இருபுறமும் வருவோா் எளிதில் மெட்ரோ நிலையத்துக்கு வருவதற்கு வசதியாக அமையும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன் முன்னிலையில், தலைமைப் பொது மேலாளா் டி.லிவிங்ஸ்டோன் எலியாசா் (திட்டம், திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), தனியாா் நிறுவனத்தின் அதிகாரி எஸ்.வினோத் ராகவேந்திரன் ஆகியோா் புதிய வாயில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனனா்.

நிகழ்ச்சியில் மெட்ரோ நிறுவன ஒப்பந்தம் கொள்முதல் மற்றும் மேலாண்மைப் பொது மேலாளா் டி.ஜெபசெல்வின் க்ளாட்சன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலி!

கோவையில் யானை தாக்கி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை, தொண்டாமுத்தூர் ஆட்டுக்கல் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மருதாச்சலம், முருகன், சதீஷ் மற்றும் ர... மேலும் பார்க்க

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

திமுக முப்பெரும் விழாவில் வழங்கப்படும் பெரியார் விருதுக்கு தூத்துக்குடி எம்பியும் திமுக துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திமுக முப்பெரும் விழாவையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படும... மேலும் பார்க்க

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயன்: தமிழக அரசு

இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் 1 கோடி மாணவர்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராகப் ப... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ஹெட்ரோகார்பன் திட்டம்: கிணறுகள் அமைக்க அனுமதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹெட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.முதல்கட்டமாக 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்ப... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போதெல்லாம் குழந்தைகளின் வயிறு நிறைகிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் குறித்து திமுக தலைவரும் முதல்வருமான... மேலும் பார்க்க

வெற்றி பெறுமா விஜய் வியூகம்...?

சுமந்த் சி.ராமன்தமிழக வெற்றிக் கழகத்தை ஓராண்டுக்கு முன்புதான் விஜய் தொடங்கியிருக்கிறாா். திமுக அரசியல் எதிரி, பாஜக கொள்கை எதிரி என விஜய் அறிவித்திருப்பதால், இந்த இரு கட்சிகளுக்கும் எதிரான வியூகத்தை வி... மேலும் பார்க்க