செய்திகள் :

நடிகர் சைன் டாம் சாக்கோ விபத்தில் சிக்கினார்! தந்தை பலி!

post image

நடிகர் சைன் டாம் சாக்கோவின் தந்தை கார் விபத்தில் வெள்ளிக்கிழமை காலை பலியானார்.

மேலும், நடிகர் சைன் டாம் சாக்கோ, அவரது தாய், சகோதரர் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் சைன் டாம் சாக்கோ தனது குடும்பத்துடன் எர்ணாகுளம் நோக்கி நேற்றிரவு காரில் புறப்பட்டுள்ளார்.

இன்று காலை 7 மணியளவில் தருமபுரி அருகே பள்ளக்கோட்டை பகுதியில் கார் வந்துகொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது.

காரின் மையப்பகுதியில் அமர்ந்திருந்த டாம் சாக்கோவின் தந்தை சி.பி. சாக்கோ விபத்தில் பலியானார். நடிகர் டாம் சாக்கோ உள்பட மற்ற அனைவரும் பள்ளக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

நடிகர் டாம் சாக்கோவுக்கு கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யார் இந்த டாம் சாக்கோ?

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சைன் டாம் சாக்கோ, உதவி இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சர்ச்சைகள்

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜன. 30-ஆம் தேதி கொச்சி காவல்துறையினர் கடவந்த்ரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்திய சோதனையின்போது, கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ஷைன் டாம் சாக்கோவையும் அவருடன் சேர்த்து மாடலிங் செய்து வந்த ரேஷ்மா, ப்ளெஸ்ஸி, டின்சி பாபு, சினேகா பாபு ஆகிய நான்கு பெண்களையும் கைது செய்தனர்.

இதனையடுத்து, போதைப்பொருள் பயன்பாடு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 2 மாதங்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அதன்பின், 2015, மார்ச் மாதம் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கின் விசாரணை கடந்த சுமார் பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில், மேற்கண்ட 7 பேர் மீதும் குற்றச்சாட்டு போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் கடந்த பிப். 11 உத்தரவிட்டது.

இதனிடையே, நடிகையிடம் போதையில் தவறாக நடந்துகொண்டதாக கடந்த ஏப்ரல் மாதம் குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.

இதையும் படிக்க : நான் இல்லையென்றால் டிரம்ப் தோற்றிருப்பார்! எலான் மஸ்க்

ஆழப்புழா ஜிம்கானா ஓடிடி தேதி!

மலையாளத்தில் வெளியாகி கவனம் பெற்ற ஆழப்புழா ஜிம்கானா படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லன், கணபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆழப்ப... மேலும் பார்க்க

அட்லி படத்தில் டிராகன்கள்?

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி திரைப்படத்தில் நடிக்கிறார... மேலும் பார்க்க

குபேரா: டப்பிங் பணிகளை முடித்த நாகர்ஜுனா!

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா குபேரா படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கியுள்ளார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் ராஷ்மிகா நாயகியாகவும் நடித்துள்ள... மேலும் பார்க்க

பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: திரளானோர் பங்கேற்பு!

கெங்கவல்லியில் பெரிய மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. கோவிலில் க... மேலும் பார்க்க

அட்லீ - அல்லு அர்ஜுன் படத்தில் தீபிகா படுகோன்!

இயக்குநர் அட்லீ இயக்கும் அல்லு அர்ஜுன் படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை விடியோவாக வெளியிட்டுள்ளார்கள். நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்திற்குப் பின் இயக்குநர் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் நடிக்... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில், பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலை ஒட்டியிருக்கும் அண்... மேலும் பார்க்க