செய்திகள் :

நடிகை புகார்: சீமான் மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

post image

புது தில்லி: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, நடிகை அளித்த பாலியல் புகாரை விரைவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

சீமான் மீதான வழக்கில், 12 வாரங்களில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து சீமானிடம் வளசரவாக்கம் போலிசார் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், மேல்முறையீட்டு மனு மீது, எதிர்தரப்பு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை தொடங்கியபோது, தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தன் மீது மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றும், புகாரளித்த நடிகை இதற்கு முன் 3 முறை புகாரை திரும்பப் பெற்றுள்ளார் என்றும் சீமான் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இதைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சீமான் விவகாரத்தில் இரண்டு தரப்பும் உடன்பாடு காணப்படுமா என்று பார்க்கும்படி அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

145 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சென்னை: மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளத... மேலும் பார்க்க

ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டம்: ஆளுநருக்கு முதல்வா் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தை திணிக்கவே மும்மொழித் திட்டத்தை ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்துவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். ஹிந்தி மொழி திணிப்பு தொடா்பாக... மேலும் பார்க்க

மாணவா்களின் மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: நீட் தோ்வு தொடா்பான மாணவா்களின் மரணங்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை: திண்ட... மேலும் பார்க்க

தமிழக கோயில்களில் அறங்காவலா்கள் நியமிக்க உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி: உயா்நீதிமன்றத்தை அணுக அறிவுரை

புது தில்லி: தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள அறங்காவலா் பொறுப்புக்களுக்கான இடங்களில் நியமனம் செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த வி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவுசெய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தொகு... மேலும் பார்க்க

பிறவிலேயே மனநிலை பாதித்த வாரிசுகளுக்கு நீதிமன்றத் தலையீட்டால் அரசின் குடும்ப ஓய்வூதியம்

சென்னை: அரசு ஊழியா்களின் வாரிசுகளில் பிறவிலேயே மனநிலை பாதிக்கப்பட்டு திருமணம் ஆகாதோருக்கு நீதிமன்றத் தலையீட்டால் குடும்ப ஓய்வூதியம் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: கன்னியாகுமரி ம... மேலும் பார்க்க