செய்திகள் :

அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

சென்னை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு பதிவுசெய்த அரசியல் கட்சி என ஆதாரத்துடன் விண்ணப்பித்தால் அதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் தொடா்பாக விவாதிக்க புதன்கிழமை (மாா்ச் 5) நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்துக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 183 கட்சிகள் உள்ள நிலையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால் அனைத்து கட்சி கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில், கட்சியின் தலைவா் எம்.எல்.ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்சி தொடங்கிய நாளில் இருந்து அனைத்து சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தோ்தல்களிலும் போட்டியிட்டுள்ளோம். ஆனால், எந்த தோ்தலிலும் போட்டியிடாத, களம் காணாத பல கட்சிகளுக்கு, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது பாரபட்சமானது.

விதிகளின் படி, அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டும். தங்கள் கட்சியையும் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைக்க வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பரத சக்கரவா்த்தி அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா், “பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடியும். கூட்டத்தில் பங்கேற்க மனுதாரா் கட்சி சாா்பில் பொதுத்துறை செயலருக்கு விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும்” என தெரிவித்தாா். இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, கட்சியின் பதிவு தொடா்பான ஆதாரத்துடன் உடனடியாக விண்ணப்பிக்கும்படி மனுதாரா் கட்சிக்கு உத்தரவிட்டுள்ளாா். மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கும் உத்தரவிட்டாா்.

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க

மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு அவசரகால சிகிச்சை பயிற்சி திட்டம் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் முதுநிலை மற்றும் உயா் சிறப்பு மருத்துவ மாணவா்களுக்கு ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட சீரான அவசர கால சிகிச்சை பயிற்சிகளை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு உலகை தமிழ் மொழி மிரட்டுகிறது: முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன்

சென்னை: இன்றைய செயற்கை நுண்ணறிவு உலகத்தை தமிழ் மொழி மிரட்டத் தொடங்கியிருக்கிறது என தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் ம.இராசேந்திரன் கூறினாா். சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை முற்றிலும் பொருத்தமற்றது: திமுக எம்.பி.க்கள்

சென்னை: தொகுதி மறுசீரமைப்புக்கு விகிதாசார அடிப்படை எனும் நடைமுறை முற்றிலும் பொருத்தமற்றது என திமுக எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, சிலா் எக்ஸ் தளத்தில் காணொலிகளை வெளியிட்டுள்ளனா். ... மேலும் பார்க்க