செய்திகள் :

நரேந்திர மோடி திடலில் குவியும் ஆர்சிபி ரசிகர்கள்!

post image

ஐபிஎல் இறுதிப் போட்டியைக் காண ஆர்சிபி ரசிகர்கள் நரேந்திர மோடி திடலில் குவிந்து வருகிறார்கள்.

அகமதாபாதில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிக்கு தற்போதே ரசிகர்கள் செல்லத் தொடங்கியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடங்கி இதுவரை ஒரு கோப்பையைக் கூட வெல்லாத இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு சென்றிருக்கிறது.

விராட் கோலி ரசிகர்களும் ஆர்சிபி ரசிகர்கள் இந்தமுறை நிச்சயமாக கோப்பையை வெல்லும் கனவில் இருக்கிறார்கள்.

பஞ்சாப் அணியை முதல்முறையாக தலைமேற்று வழிநடத்தும் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் இருக்கிறார்.

இந்த சீசனில் இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் 2-1 என ஆர்சிபி முன்னிலை வகிக்கிறது.

ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமல்லாமல் இந்தமுறை கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.

ஆர்சிபி ரசிகர் ஒருவர் தனது உடலில் விராட் கோலியை பச்சைக் குத்திகொண்டு நரேந்திர மோடி திடலுக்கு முன்பாக ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பெங்களூரு கூட்டநெரிசல்: ஆர்சிபி நிர்வாகி உள்பட 4 பேர் கைது!

பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரத்தில், 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் பேரணிக்கு அனுமதி அளித்த... மேலும் பார்க்க

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க