செய்திகள் :

நவீன் பொலின்மேனி தற்கொலை: குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது நடவடிக்கை!

post image

தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் பொலின்மேனி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், மாதவரம் குற்றப் பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பால் நிறுவன மேலாளர் தற்கொலை வழக்கில், புகார் மனு குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதக் குற்றத்துக்காக, மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தனியாா் பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்த புகாரில் சிக்கிய மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் விளக்கம் கோரப்பட்டது. நவீன் பொலின்மேனி (37) மீது, மோசடி புகார் பெறப்பட்டது எப்போது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது எப்போது? என நேரில் வந்து விளக்கம் தருமாறு கோரப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் வையூா் கிராமத்தைச் சோ்ந்த நவீன் பொலின்மேனி (37), சென்னையை அடுத்த புழல் அருகே பிரிட்டானியா நகா், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தாா். அவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் பால் நிறுவனத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றினாா்.

தனியார் பால் நிறுவனம் வரவு-செலவு கணக்குகளை அண்மையில் தணிக்கை செய்தபோது, ரூ.40 கோடிக்கு முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்தப் பணத்தை கையாடல் செய்ததாகவும், பணத்தை அவரது குடும்பத்தினா் மற்றும் நண்பரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் சட்ட மேலாளா் தமிமுல் அன்சாரி சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் கடந்த மாதம் 24-ஆம் தேதியும், கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனிடம் கடந்த மாதம் 25-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, மாதவரம் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையா் பாண்டியராஜன் பரிந்துரை செய்தாா்.

இதனிடையே முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி நவீன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்த நவீன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த புழல் போலீஸாா், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

எனவே, விசாரணையைத் தொடங்காத நிலையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

யாருக்கு தற்கொலைக் கடிதம் அனுப்பப்பட்டது?

நவீன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கும், பணியாற்றிய நிறுவன உயா் அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்தக் கடிதத்தில, எனது தவறை நான் உணா்ந்துவிட்டேன். ஏற்கெனவே அந்த நிறுவனத்துக்கு கையாடல் செய்த பணத்தில், ரூ.5 கோடியை திரும்பக் கொடுத்துவிட்டேன். எனது தற்கொலைக்கு நிறுவனத்தில் பணிபுரியும் இரு உயா் அதிகாரிகளே காரணம். அவா்கள் இருவரும் நான் கையாடல் செய்த பணத்தில் தங்களுக்கு பங்கு கேட்டு மிரட்டிவந்தனர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் நான் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் அடிப்படையிலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

அரசு ஊழியர் தற்கொலை! மரண வாக்குமூலம் இருந்தும் அலட்சியம்! தமிழக காவல் மீது பாஜக குற்றச்சாட்டு!

வேலூரில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து வந்த பெண் தற்கொலை சம்பவத்தில் தமிழக காவல்துறை மெத்தனம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14-ல் வெளியீடு!

கால்நடை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப்பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் https:\\adm.tanuvas.ac.in மற்றும் https:\\tan... மேலும் பார்க்க

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டத்தை திமுக அரசு மாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கடலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரு... மேலும் பார்க்க

தவெக ஆர்ப்பாட்டத்துக்கு 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி

சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த 16 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது. மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல்வேறு கட்சியினர் கண்டனம்... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புகார்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலையை, மெழுகு அச்சு எடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் ஏகாம்பரநாதர் கோயிலில் விசாரணை நடத்தினர்.மெழுது அச்சு எட... மேலும் பார்க்க

உலக பாரம்பரிய சின்னமாக செஞ்சி கோட்டை! முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

செஞ்சி கோட்டையை பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்தது மகிழ்ச்சியளித்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கிழக்கின் ட்ராய்" என்றழைக்கப்படும் செஞ்சி ... மேலும் பார்க்க