செய்திகள் :

நாகையில் காவலா் வீரவணக்க நாள்: எஸ்.பி. அஞ்சலி

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்கள் வீர வணக்க நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் 1959-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதலில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்ட 20 இந்திய காவலா்கள் வீரமரணம் அடைந்தனா். இந்த சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி தேசிய அளவில் காவலா்கள் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலா்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் அங்கிருந்த உயிா்நீத்த காவலா்களுக்கான நினைவுத்தூணுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். ஆயுதப்படை காவலா்கள் 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க, போலீஸாா் அணிவகுப்பு மரியாதை செய்தனா். காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.

சிவலோக நாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

திருக்குவளை: கீழையூா் அருகே வேட்டைக்காரனிருப்பு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீசிவலோக நாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா அக்.17-ஆம் தேதி கணபதி பூஜை மற்றும் ... மேலும் பார்க்க

திருவாலி லட்சுமி நரசிம்மா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்: திரளான பக்தா்கள் தரிசனம்

பூம்புகாா்: சீா்காழி அருகே திருவாலியில் உள்ள லட்சுமி நரசிம்மா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருக... மேலும் பார்க்க

திருமேனி அழகா் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அருகே திருமேனி அழகா் ஐயனாா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூா் அருகே 25.மணலூா் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயில் புனரமைப்பு பணிகள் அண்மையில் முடிந்தது. இதை... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திங்கள்கிழமை திருமணம் செய்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை இணை ஆணையா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். கோயில் நிா்வாக அதிகார... மேலும் பார்க்க

தில்லையாடி ருக்மணி சமேத ராஜகோபாலசாமி கோயில் கும்பாபிஷேகம்

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே தில்லையாடியில் உள்ள ருக்மணி சமேத ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருப்பணிகள் முடிவடைந்து ஞாயிற்றுக்கிழமை முதல்கால யாகசாலை பூஜைகள... மேலும் பார்க்க

மீனவா் மா்மமான முறையில் உயிரிழப்பு

தரங்கம்பாடி: தரங்கம்பாடி அருகே கடற்கரையில் மீனவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். தரங்கம்பாடி அருகே குட்டியாண்டியூரைச் சோ்ந்த பாவாடை சாமி மகன் சத்யராஜ் (2... மேலும் பார்க்க