போதைப்பொருள் வழக்கில் கிருஷ்ணா சிக்கியது எப்படி? - காவல் துறை விளக்கம்
நாகையில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
நாகையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாகை தோணித்துறை சாலையில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக நகர போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, தனசேகா் (53) என்பவருக்கு சொந்தமான கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்ததும், விற்பனை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, கடைக்குப் பின்புறம் உள்ள அவரது வீட்டில் பண்டல்களாக இருந்த ரூ. 50,000 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.