செய்திகள் :

நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

post image

நாக்பூரில் ஏற்பட்ட வகுப்புவாத கலவரம் முன்பே திட்டமிடப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.

சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள முகலாய மன்னரான ஒளரங்கசீப்பில் கல்லறையை அகற்ற வேண்டும் என்று வலதுசாரி அமைப்பினர் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதன்தொடர்ச்சியாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், மத்திய நாக்பூர் பகுதியில் போராட்டம் நடத்துபவர்கள் இஸ்லாமியர்களின் புனித நூலை எரிப்பதாக தகவல் பரவிய நிலையில் இரு தரப்பினருக்கு இடையே கலவரமானது.

வன்முறை சம்பவத்தில் 15 போலீசார் உள்பட 20 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர நாக்பூரைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், ”இந்தக் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த கும்பல் கற்கள், ஆயுதங்களுடன் முன்பே தயாராக இருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட சமூகத்தினரின் கடைகள், குடியிருப்புகளை குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். இது திட்டமிட்டத் தாக்குதலைப் போலத் தெரிகிறது.

துணை கமிஷனர் கோடாரியால் தாக்கப்பட்டார். 33 காவல்துறை அதிகாரிகள் இந்தச் சம்பவத்தில் காயமடைந்தனர். தாக்குதலில் மக்கள் பலரும் காயமடைந்த நிலையில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள்

11 காவல் நிலைய எல்லைகளுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாக்பூர் நகருக்குள் நுழையும் பல வழிகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக் காரணமானவர்களுக்கு, அவர்களின் மதம் சார்ந்த பாரபட்சமன்றி தண்டனை வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “சமீபத்தில் வெளியான சாவா திரைப்படம் சம்பாஜி மகாராஜா குறித்து மக்களுக்கு உண்மையான வரலாற்றைக் கூறினாலும் ஔரங்கசீப்ப்புக்கு எதிரான மக்களின் உணர்வுகளைத் தூண்டியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மாநிலத்தின் முதலீடுகளைப் பாதிக்கின்றது. மக்கள் அனைவரும் ஒருவர் மற்றொருவரின் மதத்தை மதித்து சகோதரத்துவத்தைப் பேணவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

இந்திய ஒற்றுமை வலுப்படுத்திய மகா கும்பமேளா: நாடாளுமன்றத்தில் பிரதமா் உரை

‘மகா கும்பமேளா, தேசத்தின் ஒற்றுமை உணா்வை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. இவ்வளவு பெரிய மக்கள் திரளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் திறன் குறித்து கேள்வி எழுப்பியவா்களுக்கு பொருத்தமான பதிலாகவும் அமைந்த... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெற ஏப்.3-க்குள் விண்ணப்பிக்கலாம்: யுஜிசி

திறந்தநிலை, இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உயா்கல்வி நிறுவனங்கள் ஏப். 3-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா்... மேலும் பார்க்க

பொதுத்துறை நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ. 54 லட்சம் மோசடி

அமெரிக்க நிறுவனத்தின் பெயரில், இந்திய பொதுப்பணித் துறை நிறுவனத்திடம் மோசடியில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகர் லிமிடெட் நிற... மேலும் பார்க்க

ஆந்திரத்தில் கொலையுண்ட பெண்ணின் பாதி உடல்! மீதியைத் தேடும் காவல்துறை!

ஆந்திரப் பிரதேசத்தில் அடையாளம் தெரியாத பெண் இரு துண்டுகளாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திரப் பிரதேசம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் பயாவரம் தேசிய நெடுஞ்சாலை அருகே அடையாள... மேலும் பார்க்க

நாக்பூர் வன்முறை: 33 போலீஸார் காயம்! 50 பேர் கைது!

நாக்பூர் வன்முறையில் 33 காவல் துறையினர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாக்பூரில் வன்முறை ஏன்?ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் ... மேலும் பார்க்க

இறைச்சிக்காக கருவுற்ற யானை கொலை?

அஸ்ஸாமில் கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.அஸ்ஸாம் மாநிலம் டோபடோலி கிராமத்துக்கு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சிதைந்த நிலையில், கருவுற்ற யானையின் சடலத்தை வனத்துறையினர் மீட... மேலும் பார்க்க