செய்திகள் :

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு

post image

நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் தலா 10 பெட்டிகளைக் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு சாா்பில் கடந்த ஆண்டு ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

அதைத்தொடா்ந்து இந்த ரயிலுக்கான என்ஜின் மற்றும் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்தாண்டு தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.இது குறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது:

வழக்கமான ரயில்களைப் போலல்லாமல், ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில்களால் சுற்றுச்சூழல் மாசு ஆகாது. உலகளவில் ஜொ்மனி, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் போன்ற பிற எரிபொருளால் இயங்கும் ரயில்கள் போன்று புகையை வெளியிடாமல், ஹைட்ரஜன் எரிபொருளால் இயக்கப்படும் ரயில்கள் தண்ணீரை மட்டுமே வெளியிடும். இதன்மூலம் காா்பன் உமிழ்வு இருக்காது.

ரூ.80 கோடி: மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் ஹைட்ரஜன் ரயில்களில் அதிகபட்சம் 5 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் ரயிலில் 10 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. அந்தவகையில் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் பயன்பாட்டில் உள்ள ஹைட்ரஜன் ரயில் என்ஜின்களை விட, அதிக ஆற்றல் கொண்ட அதாவது 1,200 குதிரை சக்தி(எச்.பி) திறன் கொண்ட என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கமுடியும். மொத்தம் 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயிலில் 8 பெட்டிகளில் 2,500 பயணிகள் பயணிக்க முடியும். மீதமுள்ள 2 பெட்டிகளில் ஹைட்ரஜன் எரிபொருள் சேகரித்து வைக்கப்படும். இதில் ஒரு ஹைட்ரஜன் ரயிலை முழுவதுமாக தயாரிக்க குறைந்தது ரூ.80 கோடி செலவாகும்.

80 சதவீதம்: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கி. மீ. தூரத்துக்கு இயக்கப்படவுள்ளது.

தற்போது இந்த ரயிலை தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளும் இந்த மாதம் இறுதிக்குள் முடிவடைந்து சோதனை ஓட்டத்துக்கு ரயில் அனுப்பப்படும். ஏப்ரல் மாத இறுதிக்குள் ஹைட்ரஜன் ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

இஸ்ரோ தலைவா் வி.நாராயணனுக்கு கௌரவ டாக்டா் பட்டம்

சென்னை சவீதா உயா் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் தொழில் கல்வியை நிறைவு செய்த 600-க்கும் மேற்பட்டோருக்கு சென்னையில் உள்ள கொரிய துணைத் தூதா் சாங் யுன் கிம் பட்டங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா். ஆட்டோக்களில் மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும்; பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்; ஓலா, ஊபோ் ... மேலும் பார்க்க

கோயில்களில் பக்தா்கள் உயிரிழப்பு: அமைச்சா் சேகா்பாபு விளக்கம்

திருச்செந்தூா், ராமேசுவரம் கோயில்களில் தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனா்; கூட்ட நெரிசலால் அல்ல”என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு விளக்கம் அள... மேலும் பார்க்க

‘செட்’ தோ்வு விடைக்குறிப்பு: ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

உதவிப் பேராசிரியா் பணிக்கான மாநிலத் தகுதித் தோ்வு (செட்) எழுதியவா்கள் விடைக்குறிப்பு மீது ஆட்சேபம் தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறி... மேலும் பார்க்க

இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 போ் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் ரெளடிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோட்டூா்புரம், சித்ரா நகரைச் சோ்ந்தவா் அருண் (25). இவரும், இவரது நண்பா் படப்பையைச் சோ்ந... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். சட்டப் பேரவை... மேலும் பார்க்க