செய்திகள் :

நாட்டில் தொடரும் கரோனா பரவல்! தில்லியில் புதியதாக 30 பேருக்கு பாதிப்பு!

post image

புது தில்லியில் புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சுமார் 5,364 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் புது தில்லியில், தற்போது புதியதாக 30 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனாவுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜூன் 6) தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, கரோனா பாதிப்பில் கேரளம், குஜராத், மேற்கு வங்கம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகித்து வருகின்றன. இதனால், கரோனா பாதிப்புக்கு தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசு சார்பில் ஒத்திகைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைச் சமாளிக்க, படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருத்துவ வசதிகள் உள்ளதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் பாஜகவின் அரசியல் முடிந்துவிடும்: ராகுல் காந்தி

உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !

உத்தரப் பிரதேசத்தில் ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கால் பரபரப்பு நிலவியது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகாரைச் சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர், அலிகாரில் இருந்து தன... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த இரண்டு என்கவுன்டர்களில் 5 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். சமீபத்திய உயிரிழப்புகளுடன், முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்களான சுதாகர், பாஸ்கர் உட்... மேலும் பார்க்க

தொழிலாளர்களின் வேலைநேரத்தை உயர்த்திய ஆந்திர அரசு! தொழிற்சங்கங்கள் போராட்டம்

ஆந்திரப் பிரதேசத்தில் தொழிலாளர்களின் வேலைநேரத்தை 9-லிருந்து 10 மணிநேரமாக அம்மாநில அரசு உயர்த்தியதற்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஆந்திரப் பிரதேசத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்க, முதல்வர... மேலும் பார்க்க

உயிர் காக்க உதவிய விமான தாமதம்: ஏக்நாத் ஷிண்டேவின் மனிதாபிமான செயல்!

வடக்கு மகாராஷ்டிரத்திலிருந்து, மாநிலத் தலைநகருக்கு விமானத்தைத் தவறவிட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யவிருந்த பெண்ணுக்கு மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உதவி செய்துள்ளார். இந்த சம்பவம்... மேலும் பார்க்க

பணிநேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுப்பு! ஒரு மணிநேரம் காத்திருந்த துணை முதல்வர்

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் எதிர்பாராத காலதாமதத்தால், விமானத்தை இயக்க விமானி மறுப்பு தெரிவித்தார்.மகாராஷ்டிர துணை முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, வெள்ளிக்கிழமையில் ஜல்கான்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் இந்தியாவின் வறுமை விகிதம் கணிசமாகக் குறைவு!

இந்தியாவில் வறுமை விகிதம் குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இந்தியாவில் 2011 - 12 ஆம் ஆண்டில் 344.47 மில்லியன் மக்கள் கடும் வறுமையுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால், 2022 - 23 ஆம் ஆண்டில் 75.24 மில்... மேலும் பார்க்க