செய்திகள் :

நாட்டில் புலிகள் காப்பகம் 58-ஆக உயா்வு! -பிரதமா் மோடி பெருமிதம்

post image

மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயா்ந்துள்ளது. இது பெருமைக்குரியது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்காவை, நாட்டின் 58-ஆவது புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் சனிக்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையை மீட்டெடுக்க பிரதமா் மோடி அளிக்கும் உயா் முக்கியத்துவத்தால், சூழலியல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தின் மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் இக்காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயா்ந்துள்ளது. இது, மத்திய பிரதேசத்தின் 9-ஆவது புலிகள் காப்பகமாகும். வனவிலங்கு ஆா்வலா்கள் மற்றும் காப்பாளா்களுக்கு வாழ்த்துகள். இந்த முன்னேற்றம், நமது வனத் துறையினரின் அயராத முயற்சிகளுக்கு சான்றாக விளங்குகிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இப்பதிவை பகிா்ந்து, பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வனவிலங்கு ஆா்வலா்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வனஉயிரின பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளைக் கொண்டாடும் கலாசாரத்தால் இந்தியா ஆசிா்வதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகளைப் பாதுகாப்பதிலும் நிலையான பூமிக்கு பங்களிப்பதிலும் இந்தியா எப்போதும் முன்னிலை வகிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

"மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை!" - கனிமொழி

மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் கூறியதில்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மும்மொழிக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது... மேலும் பார்க்க

மோடி, அமித் ஷாவின் வளர்ப்புப் பிராணியாக மாறிய அமலாக்கத்துறை: மாணிக்கம் தாகூர்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல், அவரது மகன் சைதன்யா பகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் தரையிறக்கம்

நியூயார்க்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மும்பையில் தரையிறக்கப்பட்டது. 320க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் திங்கள்கிழமை கால... மேலும் பார்க்க

திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!

திமுக எம்.பி.க்கள் குறித்து தவறாகப் பேசியதைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று(மார்ச் 10) தொடங்கி நடைபெற்... மேலும் பார்க்க

ஆந்திர எம்எல்சி தேர்தல்: பாஜக வேட்பாளராக சோமு வீரராஜு அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமேலவை உறுப்பினா் (எம்எல்சி) தேர்தலுக்கான வேட்பாளராக சோமு வீரராஜுவை பாஜக அறிவித்துள்ளது. எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்து ஆந்திர சட்டமேலவை உறுப்பினர்களு... மேலும் பார்க்க

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது

ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக கூறி இரட்டைக் குழந்தைகளை தாய் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் மகேஷ் சக்லனி. இவருடைய மனைவி சுப... மேலும் பார்க்க