செய்திகள் :

நாட்டுக்கு தேவை என்பதால் கூட்டணி; தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்: கமல்ஹாசன்

post image

தவறுசெய்தால்தான் மன்னிப்பு கேட்பேன் என்று கன்னட மொழி விவகாரம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்துப் பேசினார்.

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதையடுத்து கமல்ஹாசன், எம்.பி. ஆகிறார். இதையடுத்து கமல்ஹாசன், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய கமல்ஹாசன்,

"மாநிலங்களவையில் மநீமவுக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு முதல்வரைச் சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்ய முதல்வர் அறிவுறுத்தியிருக்கிறார்.

நாட்டுக்குத் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணிக்கு வந்துள்ளோம். மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்காக எனது குரல் ஒலிக்கும். ஆனால், தமிழ்நாட்டுக்காக எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று கூறினார்.

கன்னட விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கமல்,

"இது ஜனநாயக நாடு. சட்டத்தையும் நீதியையும் நம்புகிறேன். மேலும் அன்புதான் முதன்மை என்று நம்புகிறேன். கேரள, ஆந்திர, கர்நாடக மக்களின் மீதான என்னுடைய அன்பு உண்மையானது.

நான் தவறு செய்திருந்தால்தான் மன்னிப்பு கேட்பேன், தவறே செய்யவில்லை என்றால் கேட்க மாட்டேன். இதுதான் என்னுடைய வாழ்க்கைமுறை" என்றார்.

இதையும் படிக்க | முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு!

மாணவர் சேர்க்கையில் அசத்திய சென்னை மாநகராட்சி பள்ளிகள்

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நல்ல முறையில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.2025 - 26ஆ... மேலும் பார்க்க

தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.240 உயர்ந்துள்ளது. வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,950-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 பேர் கொலை

கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் உட்பட 2 பேரை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் 6 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ... மேலும் பார்க்க

காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம்!

சென்னை: தமிழகத்தில் இன்று கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு வர வேண்டாம் என கடலூர் முதன்மை கல்வி அலுவலகம் அறிவுரை வழங்கியிருக்கிறது.கோடை விடும... மேலும் பார்க்க

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன. தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: இன்று தண்டனை விபரம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று (ஜூன் 2) தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழ... மேலும் பார்க்க