செய்திகள் :

நான் மாறியதற்கான காரணத்தை காலம் உனக்குப் புரிய வைக்கும்! - மகளுக்கு ஒரு கடிதம் | #உறவின்கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அன்பு மகள் பிரியாவிற்கு,

இந்தக் கடிதத்தை எழுதத் துவங்கும் போது 'அன்பு மகள்' என்று ஆரம்பிப்பதா அல்லது 'பிரியமுள்ள பிரியா' என்று ஆரம்பிப்பதா என்ற குழப்பம் எனக்கு இருந்தது. அதற்குக் காரணம் இதற்கு முன்பு உனக்குக் கடிதம் எழுதும் வாய்ப்பு எனக்கு வாய்த்ததில்லை.

ஆனால் கடிதம் எழுதுவதில் உள்ள செளகரியம் என்னவென்றால், நம் அன்பையும், பிரியத்தையும், பச்சையாக தயக்கமில்லாமல் எழுத்து வடிவில் வெளிப்படுத்த முடிவதுதான்.

சித்தரிப்புப் படம்

உன்னைப் பள்ளி விடுதியில் கொண்டு வந்து விடுவதற்காக நாங்கள் அனைவரும் உன் விடுதிக்கு வந்த நாள் இன்னும் எனக்குப் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. அன்று நான் மட்டுமே குடை கொண்டு வந்திருந்தேன்.

காரிலிருந்து இறங்கி, பெய்து கொண்டிருந்த சாரல் மழையில் நனையாமல் உன்னைக் குடையின் கீழ் நடத்தி, விடுதி நோக்கி அழைத்துச் சென்றேன். அன்று கடந்து வந்த அந்த இருநூறு மீட்டர் தூரமும், நான் குடையின் உள்ளே குனிந்து கொண்டே உன்னை வழி நடத்திச் சென்றேன்.

ஏனென்று நீ கேட்டதற்கு, உன் உயரம் காரணமாக சாரல் நீர் உன் மேல் விழுவதைத் தடுப்பதற்காக என்றேன். அடுத்த நாள் கழுத்தும், முதுகும் வலித்ததைச் சொன்னதற்கு, உன் அம்மா என்னை, 'பெரிய 'அபியும் நானும்' படத்தில் வரும் பிரகாஷ் ராஜும், திரிஷாவும் போலத்தான்...' என்று கிண்டல் செய்தாள்.

உனக்கு இரண்டு வயது இருக்கும்போது, உறக்கம் வராமல், இரவில் உறங்குவதற்கு முன்பு அழுது கொண்டே இருப்பாய். உன் அழுகையை அடக்குவதற்காக, உன்னை என் சுசுகி பைக்கின் பெட்ரோல் டேங்கின் மீது உட்கார வைத்து, நீ கீழே விழாமல் இருப்பதற்காக உன்னை என் இரண்டு கால்களாலும் கெட்டியாகப் பிடித்து, அந்த இரவு நேரத்திலும் சாலையில் சுற்றி வருவேன்.

சில சமயம் பத்து நிமிடத்தில் உறங்கும் நீ, சில சமயம் அரை மணி நேரம் உறங்காமல் இருந்தாலும் கூட, வண்டியை நிறுத்தாமல் சுற்றி உன்னை அரைத்தூக்கத்தில் வீடு கொண்டு வந்து சேர்ப்பேன்.

இயற்கையிலேயே கோப குணம் கொண்ட நான் அப்படிப் பொறுமையாக வண்டியில் உன்னை வைத்துச் சுற்றியதைப் பார்த்து உன் அம்மாவும், அம்மாச்சியும் ஆச்சரியப் பட்டார்கள். ஆனால் இந்தப் பதினைந்து வருடங்களில் நான் உன் மீது ஒரு முறை கூடக் கோபப்பட்டதில்லை என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.

தேர்வு கழிந்து கிடைக்கும் விடுமுறை நாட்களில் நீ விடுதியில் இருந்து வரும் நாட்கள் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த நாட்கள்தான் எனக்கு தீபாவளி, பொங்கள் எல்லாம். நீ காரில் இருந்து இறங்கும்போதே, வெளிக் கேட்டருகில் காத்துக் கொண்டிருப்பேன்.

ஓடி வந்து தாவும் உன்னை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, சட்டைப்பையிலிருந்து உனக்குப் பிடித்த சாக்லெட்டை எடுத்து நீட்டுவேன். அதை வாங்கிக் கொண்டே கள்ளத்தனமாக நீ என்னைப் பார்ப்பாய். அந்தப் பார்வையின் அர்த்தம், 'அம்மாகிட்ட சொல்லாதீங்க..'. நானும் உன்னை அர்த்தத்துடன் பார்ப்பேன். அதன் அர்த்தம், 'நீயும் சொல்லி உன் அம்மாவிடம் எனக்குத் திட்டு வாங்கிக் கொடுக்காதே..' என்பதுதான்.

தோட்டத்திலும், வீட்டிலும் உன்னைத் தோளிலும், மார்பிலும் சுமந்து திரிந்த நான் திடீரென்று மாறியதற்குக் காரணம் என்ன என்பதைக் காலம்தான் உனக்குப் புரிய வைக்கும்.

பெண்களின் வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலிருந்து அடுத்த பருவத்திற்கு மாறும்போது, தகப்பனாக இருந்தாலும் நமது அன்பை உடல் மொழியில் வெளிப்படுத்த சமூகத் தடைகள் பல இருக்கின்றன என்பதுதான் அந்த உண்மை. அந்தத் தடைதான், மாவட்ட அளவில் ஓட்டப்பந்தயத்தில் முதலாக வந்த உன்னை மாநில அளவிளான போட்டிக்கு அனுப்ப உன் அம்மா தடையாக இருந்தாள் என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும்.

நான் சோபாவில் அமர்ந்து கொண்டு, உன்னைத் தரையில் உட்கார வைத்து உன்னுடைய அடர்ந்த கூந்தலுக்கு எண்ணெய் தடவி விட்டுக் கொண்டிருப்பதை உன் அம்மா ஒரு மாதிரிப் பார்த்துச் செல்வார். காரணம் என்னவென்றால் நீ பிறப்பதற்கு முன்பு, உன் அம்மாவுக்கு நான் தான் எண்ணெய் தேய்த்து விடுவேன். காலப்போக்கில் இப்போது அந்த உரிமை அம்மாவிடம் இருந்து நீ பறித்துக் கொண்டதால்தான் அந்தப் பொறாமைப் பார்வையின் காரணம்.

என் அன்பு மகளே.. இப்படி நம் அன்பின் பரிமாற்றத்தைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். அதற்கு எல்லையே இல்லை.

மகளே, ஒரு நாள் ஒரு சந்தேகத்தை நீ என்னிடம் கேட்டாய்.

' அப்பா.. நீங்கள் என்னிடம் காண்பிக்கும் இத்தனை அன்பை என் அண்ணாவிடம் காண்பிப்பதில்லையே ஏன்?'.

அதற்கு நான் கூறிய பதில் இன்னும் உனக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

'உன் உருவத்திலும், குணத்திலும் நான் என் அம்மாவைப் பார்க்கிறேன்'.

உன் பிரியமுள்ள அப்பா.

My Vikatan-இல் உங்களது உணர்வுப்பூர்வமான `கடிதம்'

`ஒரு கடிதம் எழுதினேன்’

`ஒரு கடிதம் எழுதினேன்!’

My Vikatan: `பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களுக்கும் எழுதும் நெகிழ்வான கடிதம்!’

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கடிதங்கள் விகடன் தளத்தில் வெளியாவதுடன், அதனை எழுதியவர்கள், `இயக்குநர் ராம்’ உடன் இணைந்து அவர் இயக்கியுள்ள ‘பறந்து போ’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கும் வாய்ப்பு!

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 26, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றை நீ எனக்கு செய்தாய்! - அப்பாவின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

என்னடா இவரு நம்மளை கண்டுக்கவே இல்லை என்று தோன்றும்! - அப்பாவுக்கு ஒரு மகனின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார்

அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு என 70-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ள விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். 1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி நெல்லையைச் சேர்ந... மேலும் பார்க்க

மிளிர் கல் : கண்ணகியின் வழித்தடத்தில் ஒரு பயணம் - அட்டகாச கதை

பூம்புகார் தொடங்கி இடுக்கியில் அமைந்துள்ள மங்களா தேவி கண்ணகி கோயில் வரை கண்ணகியின் வழித்தடத்தில் ஒரு பயணம் சென்றால் எப்படி இருக்கும்? அந்தப் பயணம் தான் மிளிர் கல் நாவல். புறநானூறு காலம்புறநானூறு உள்ளி... மேலும் பார்க்க