செய்திகள் :

"நான் ZOHO-வுக்கு மாறுகிறேன்" - பிரதமரின் `சுதேசி' வேண்டுகோளை ஏற்ற மத்திய அமைச்சர்

post image

இம்மாத தொடக்கத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில், பிரதமர் மோடியின் சுதந்திர தின அறிவிப்பின்படி ஏற்கெனெவே இருந்த வரி விகிதத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, சீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி 2.0 வரி விகிதங்கள் நேற்றுமுதல் நடைமுறைக்கு வந்தன.

இவ்வாறிருக்க, நேற்று முன்தினம் மோடி தனது உரையில், "அனைத்து மாநில அரசுகளும் சுதேசி திட்டத்திற்குத் தீவிர ஆதரவு அளிக்க வேண்டும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

`சுதேசி' என்ற மந்திரம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு எப்படி வலிமை சேர்த்ததோ, அதே மந்திரம் நாட்டின் செழிப்பையும் வலுப்படுத்தும்.

இன்று, தெரிந்தும் தெரியாமலும், பல வெளிநாட்டு பொருள்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. சார்புநிலையிலிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை நாம் தேர்வு செய்து வாங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ZOHO - மென்பொருள் நிறுவனம்
ZOHO - மென்பொருள் நிறுவனம்

இந்த நிலையில் மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமரின் `சுதேசி' அழைப்பை ஏற்று zoho சாஃப்ட்வேருக்கு மாறியிருக்கிறார்.

இது குறித்து அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "டாகுமெண்ட்ஸ் (Documents), ஸ்ப்ரெட்ஷீட் (Spreadsheets), ப்ரெசென்ட்டேஷன் (Presentations) ஆகியவற்றுக்காக நம் நாட்டின் zoho-வுக்கு நான் மாறுகிறேன்.

பிரதமர் மோடியின் அழைப்பின்படி அனைவரும் இந்திய தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பயன்படுத்துமாறு அனைவரும் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

தனியே சந்தித்த அண்ணாமலை; மாறுவாரா தினகரன்? - கூட்டணிக் கணக்கில் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை தனியே சந்தித்து, தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார், தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை. அந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் என்ன?த... மேலும் பார்க்க

"இந்தி வந்தால் அடுத்து சமஸ்கிருதம் வரும்; சிந்தனையை மழுங்கடிக்கும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மாநில அளவிலான அடைவுத்திறன் (SLAS 2025) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இத... மேலும் பார்க்க

Congress support இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சியமைக்க முடியாது - Data Head Praveen Chakravarty

2026ல்- விஜய் புதிதாக களமிறங்குவதால் அரசியல் சூழல் முன்பைப் போல் இல்லாமல் மாறியுள்ளது. விஜய் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துவார் என்று எழும் கேள்விக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கணிப்புகளை கூறுகின்றனர்... மேலும் பார்க்க

``மழைநீர் கால்வாயில் கலக்கும் சாக்கடை நீர்'' - சுகாதார சீர்கேட்டால் அவதிப்படும் சோழவரம் மக்கள்

புழல் ஏரிகடலே பார்த்துப் பொறாமைப்படும் அளவுக்குப் பரப்பளவு கொண்ட ஏரிதான் நம்ம புழல் ஏரி. இந்த ஏரியில் தண்ணீர் இல்லாமல் போனால், சிங்காரச் சென்னையே தத்தளித்துவிடும். மழை பெய்யும் போது புழல் ஏரியைச் சுற்... மேலும் பார்க்க

தவெக: "எழுதிக்கொடுக்கும் சினிமா டயலாக்கை சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதை மக்கள் விரும்பவில்லை" - அப்பாவு

நெல்லையில் குடிநீர் திட்டப்பணிகள் தொடர்பான அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதல் மொழி தமிழ். தொட... மேலும் பார்க்க

``கட்டுறாங்க, கட்டுறாங்க 15 வருசமா பாலத்தை கட்டுறாங்க'' - குமுறும் திருமுல்லைவாசல் கிராம மக்கள்

திருமுல்லைவாசல்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சியில் உப்பனாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியானது மாநில நெடுஞ்சாலைத்துறையால் ரூ.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2007-ல் தொடங்கப்பட்... மேலும் பார்க்க