செய்திகள் :

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

post image

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு இன்று(மார்ச் 31) குறைவாக இருக்கும்.

01-04-2025 முதல் 04-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 -3 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

31-03-2025 மற்றும் 01-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2- 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

02-04-2025 முதல் 04-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி-இயல்பைவிட சற்று குறைவாக இருக்கக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், மார்ச் 31 முதல் ஏப் 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (31-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தமிழ்நாடு பெருமையுடன் கர்ஜித்தது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு!

அமெரிக்க வரி விதிப்பு கொள்கையால் தமிழ்நாட்டிற்கு இருக்காது: அமைச்சர் டி. ஆர்.பி.ராஜா

அமெரிக்க வரி விதிப்பு கொள்கையால் எந்த பாதிப்பும் தமிழ்நாட்டிற்கு இருக்காது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர... மேலும் பார்க்க

கோ-ஆப்டெக்ஸ் உதவி விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம்: அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு புதியதாக தெரிவு செய்யப்பட்ட உதவி விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந... மேலும் பார்க்க

அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே: இபிஎஸ்

அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே என்று கட்சியின் பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மலைப் பிரதேசமான நீலகிரி மாவ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல... மேலும் பார்க்க

வரும் 9 ஆம் தேதி அண்ணாமலை மாற்றம்? தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் யார்?

தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் வரும் 9 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவா... மேலும் பார்க்க

கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!

கோவைக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் வருகை தந்தார். கோவை விமான நிலைய... மேலும் பார்க்க