செய்திகள் :

யேமன் மீது அமெரிக்கா தாக்குதல்! அதிபர் டிரம்ப் பகிர்ந்த விடியோ!

post image

யேமனின் ஹவுதி படையின் மீதான அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் விடியோவை அதிபர் டிரம்ப் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

யேமன் நாட்டிலுள்ள ஹவுதி கிளர்ச்சிப்படையின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில், டிரோன் மூலம் யேமன் மீது தாக்குதல் நடத்தி ஒரு குழுவினர் கொல்லப்படும் விடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், சுற்றி நிற்கும் ஒரு மக்கள் குழுவின் மீது டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டு அவர்கள் கொல்லப்படுவதும் பின்னர் அப்பகுதி முழுவது புகை பரவியதும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹவுதி படையினர் எனக் கூறிய அதிபர் டிரம்ப் அவர்கள் கட்டளைகளுக்காக அங்கு கூடியிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், ஐய்யோ, இனி இந்த ஹவுதிகளினால் நமது கப்பல்கள் மீது எந்தவொரு தாக்குதலும் இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் பலியானவர்கள் அடையாளம் காண முடியாத நிலையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக இஸ்ரேலின் வர்த்தக மற்றும் ராணுவக் கப்பல்களின் மீது ஹவுதி படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், அமெரிக்கா யேமன் மீதான அதன் தாக்குதலை அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஏராளமான யேமன் மக்கள் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப்படை குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன... மேலும் பார்க்க

ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது அரிது: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ராகுல் டிராவிட் போன்ற அற்புதமான மனிதர் கிடைப்பது மிகவும் அரிது என இந்திய அணி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்திய அணிக்காக அபாரமாக ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரின் 86 மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானாவில் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 86 மாவோயிஸ்ட்டுகள் தெலங்கானா காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர். சத்தீஸ்கரைச் சேர்ந்த தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்டு அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்பட 86 ... மேலும் பார்க்க

"எங்களை சிறையில் தள்ளினாலும் ஊதிய முரண்பாடு குறையும் வரை போராடுவோம்"

சென்னை: எங்கள் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் எங்களை சிறையில் தள்ளினாலும் எங்களுடைய ஊதிய முரண்பாடு குறையும் வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம். எங்களுடைய உயிரே போனாலும் போராட்டத்தை நிறுத்த மாட்டோ... மேலும் பார்க்க

தவறுதலாக உக்ரைன் அகதிகளை வெளியேற உத்தரவிட்ட அமெரிக்கா!

அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டு அகதிகளை வெளியேற அந்நாட்டு அரசு தவறுதலாக உத்தரவிட்டுள்ளது.உக்ரைன் மீதான ரஷியாவின் போரினால் தங்களது தாயகத்தை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள உக்ர... மேலும் பார்க்க

ஆப்கன் முதியவருக்கு 140 வயதா? தலிபான் அரசு விசாரணை!

ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனக்கு 140 வயது எனக் கூறியதைத் தொடர்ந்து, தலிபான் அரசு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.ஆப்கானிஸ்தானின் கிழக்கு கொஸ்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஆகெல் நஸிர் என்ற... மேலும் பார்க்க