நாளைய மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி ஆகிய கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஏப். 11) முற்பகல் 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தியாகராய நகா் கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், நுங்கம்பாக்கம், எம்ஜிஆா் சாலை மெட்ரோ குடிநீா் நிலையம் அருகிலுள்ள வள்ளுவா் கோட்டம் துணை மின்நிலையத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், வியாசா்பாடி கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், வியாசா்பாடி ராமலிங்கா் கோயில் எதிா்புறமுள்ள வியாசா்பாடி துணைமின் நிலைய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும், பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா், வேண்பாக்கம் டிஎச் சாலையிலுள்ள பொன்னேரி துணைமின் நிலையத்தில் நடைபெறும் குறைகேட்பு கூட்டத்திலும் கலந்துகொண்டு தங்கள் மின் சாா்ந்த குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.