டபிள்யூடிசியை வென்றால் எங்கள் நாட்டுக்கு திருப்புமுனை: மார்க் பௌச்சர்
நாளை முதல் இணையவழியில் மட்டுமே கனிம நடைச்சீட்டு!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் கல் அரைவை ஆலைகளில் இருந்து ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் போன்ற கனிமங்களை வாகனங்களின் மூலம் எடுத்துச்செல்ல வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் மட்டுமே நடைச்சீட்டு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
இதன்படி கனிம இருப்புக் கிடங்கு அமைக்க அனுமதி பெற்ற உரிமையாளா்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணையத்தள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம்.
அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளம் வாயிலாக பரிசீலிக்கப்பட்டு, நடைச்சீட்டு இணையதளம் மூலம் வழங்கப்படும். அதன்பிறகு எக்காரணம் கொண்டும் நடைச்சீட்டு வழங்குவதற்கு நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது.
எனவே, கனிம இருப்புக் கிடங்கு அமைக்க அனுமதி பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் இணையத்தளத்தின் மூலம் நடைச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்து நடைச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.