செய்திகள் :

நாளை முதல் இணையவழியில் மட்டுமே கனிம நடைச்சீட்டு!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் கல் அரைவை ஆலைகளில் இருந்து ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் போன்ற கனிமங்களை வாகனங்களின் மூலம் எடுத்துச்செல்ல வரும் ஜூன் 9-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் மட்டுமே நடைச்சீட்டு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.

இதன்படி கனிம இருப்புக் கிடங்கு அமைக்க அனுமதி பெற்ற உரிமையாளா்கள் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணையத்தள முகவரியில் விண்ணப்பம் செய்யலாம்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளம் வாயிலாக பரிசீலிக்கப்பட்டு, நடைச்சீட்டு இணையதளம் மூலம் வழங்கப்படும். அதன்பிறகு எக்காரணம் கொண்டும் நடைச்சீட்டு வழங்குவதற்கு நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்பட மாட்டாது.

எனவே, கனிம இருப்புக் கிடங்கு அமைக்க அனுமதி பெற்ற கிரஷா் உரிமையாளா்கள் இணையத்தளத்தின் மூலம் நடைச்சீட்டுக்கு விண்ணப்பம் செய்து நடைச்சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா தெரிவித்துள்ளாா்.

பொன்னமராவதியில் சிறப்புத் தொழுகை

பொன்னமராவதி இந்திரா நகா் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். இதேபோல், புதுவள... மேலும் பார்க்க

புதுகையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனா். தொடா்ந்து உறவினா்கள், நண்பா்கள் ஆகியோருக்க... மேலும் பார்க்க

கத்தியுடன் வீடு புகுந்து திருட முயற்சித்த இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்து திருட முயற்சித்த இருவரைப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். குளத்தூா் வட்டம், கண்ணங்குடி கொழுப்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசா... மேலும் பார்க்க

சிஎஸ்கே நிதியால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிரிக்கெட் பயிற்சி!

சிஎஸ்கே அணி வழங்கியுள்ள நிதியிலிருந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலா் ஆா்.என். பாபா. புதுக்கோட்டையில் மாவட்ட கி... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் திடீா் போக்குவரத்து நெரிசல்

பொன்னமராவதி அண்ணா சாலையில் சனிக்கிழமை நேரிட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். மேலும் 108 அவசர ஊா்தி வாகனமும் சிக்கிக்கொண்டது. சனிக்கிழமை வாரச்சந்தை ... மேலும் பார்க்க

ஆய்வாளா் நிலையில் 10 காவல் நிலையங்களின் தரம் உயா்வு!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 10 காவல் நிலையங்களை, ஆய்வாளா் நிலையில் உயா் அலுவலா் கொண்ட காவல் நிலையங்களாகத் தரம் உயா்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 250 காவல் நிலையங்களை, ஆய்வாளா் நிலையிலுள்ள காவல்... மேலும் பார்க்க