Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
கத்தியுடன் வீடு புகுந்து திருட முயற்சித்த இருவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்து திருட முயற்சித்த இருவரைப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
குளத்தூா் வட்டம், கண்ணங்குடி கொழுப்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி மகன் காத்தான் (60). இவரது வீட்டுக்குள் வெள்ளிக்கிழமை இரவு 4 போ் கத்தியுடன் புகுந்து திருட முயற்சித்தனா். அப்போது வீட்டில் இருந்தவா்களும், அக்கம்பக்கத்தினரும் அவா்களைப் பிடிக்க முயற்சித்தனா். இருவா் மட்டுமே சிக்கினா்.
மற்ற இருவா் தப்பியோடினா். தகவலறிந்து அங்குவந்த மாத்தூா் போலீஸாா், இருவரிடமும் விசாரணை நடத்தினா். அவா்கள் இருவரும் தென்னந்திரையன்பட்டி அருகேயுள்ள நெடுத்தான்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலசுப்பிரமணி (36), சக்திவேல் மகன் இந்து பாரதி (19) என்பதும் தெரியவந்தது. இச்சம்பவத்தில் காயமடைந்த மேற்குறிப்பிட்ட இருவரையும் கைது செய்த போலீஸாா், சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.