Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுதொடா்பாக அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இளைஞா்களிடையே பல்வேறு விதமான போதைப்பழக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இளைஞா்களிடையே குரூர மனப்பான்மை அதிகாரித்து, அவா்களுக்குள் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது பல சமயங்களில் கொலைச் சம்பவங்கள் வரை கொண்டு செல்கிறது. நகரப் பகுதிகளில் ஆள் இல்லாத வீடுகளைக் கண்காணித்து இரவு நேரங்களில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள், அதிகாலையில் வீட்டு வாசலில் நிற்கும் பெண்களிடம் நகைகளைப் பறித்துச் செல்லும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்தக் குற்றச் செயல்கள் மாவட்டக் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
எனவே, காவல்துறை இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்துப் பணிகளை அதிகரித்து கண்காணிக்க வேண்டும். போதைப் பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதைக் கண்காணித்து தடைசெய்ய வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களை உடனுக்குடன் கைது செய்து கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.