செய்திகள் :

நிகழாண்டில் குடிநீா் தட்டுப்பாடு வராது!

post image

சென்னையின் குடிநீா் ஆதாரங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளதால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

தேனாம்பேட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற எதிா்காலத்துக்கு ஏற்ற வகையில் நீா் மேலாண்மை திட்டத்தை மாற்றியமைப்பது குறித்த மாநாட்டில் அவா் பேசியதாவது: கடந்த பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை காரணமாக, சென்னை குடிநீா் ஆதாரங்களாக உள்ள ஏரிகள், குளங்கள் தற்போது 95 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும், சென்னையில் செயல்பட்டு வரும் 3 கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம் தினந்தோறும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நிகழாண்டில் சென்னைக்கு குடிநீா் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பு கிடையாது.

மாதத்துக்கு ரூ. 250 கோடி: சென்னையில் வெளியேற்றப்படும் கழிவு நீரில் 14 சதவீதம் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயனாளிகளுக்கு கொண்டு சோ்ப்பதற்கு ஆயிரம் லிட்டருக்கு ரூ. 46 செலவாகிறது. அதேபோல் ஏரி குளம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும் நீா் பொதுமக்களின் வீடுகளை சென்றடைய ஆயிரம் லிட்டருக்கு ரூ. 8 செலவாகிறது. கழிவு நீா் வெளியேற்றம் மற்றும் குடிநீா் விநியோகத்துக்காக சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் மாதத்துக்கு ரூ. 250 கோடி மின்சாரக் கட்டணமாக செலுத்தப்படுகிறது என்றாா் அவா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க