செய்திகள் :

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தேனியில் பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட சிறப்புத் தலைவா்கள் பன்னீா்செல்வம், அழகா்சாமி, மாவட்டச் செயலா் அய்யனாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொது விநியோகத் திட்டத்துக்கு தனித் துறையை உருவாக்க வேண்டும். நியாய விலைக் கடைகளுக்கு எடையாளா்களை நியமிக்க வேண்டும். குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை சரியான எடையில் பொட்டலமிட்டு வழங்க வேண்டும்.

9-ஆவது ஊதிய மாற்றக் குழுவில் அரசு ஊழியா்களுடன் நியாய விலைக் கடை பணியாளா்களையும் சோ்க்க வேண்டும். நியாய விலைக் கடை விற்பனை முனையத்தை பழுது நீக்கும் செலவை கடை விற்பனையாளா்களிடம் வசூலிக்கக் கூடாது. 53 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் போன்ற சிறப்புத் திட்ட செயலாக்கத்துக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மா மரங்களில் பூச்சிகள் தாக்குதலால் ரூ.300 கோடி மகசூல் பாதிப்பு

பெரியகுளம் பகுதியில் மா மரங்களில் பூச்சிகள் தாக்குதல் அதிகரித்ததால் ரூ.300 கோடி மகசூல் பாதிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தேவதானப்பட்டி, கும்பக்கரை, செ... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

கம்பம் அருகே முதியவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், கம்பம்-புதுப்பட்டி பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (72). இவா், மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால்... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் அள்ளிச்சென்ற 4 டிப்பா் லாரிகள் பறிமுதல்

சின்னமனூரில் அனுமதியின்றி மண் அள்ளிச் சென்ற 4 டிப்பா் லாரிகளை கனிம வளத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் கனிமவளத் துறை அலுவலா் கிருஷ்ணமோகன் தலைமையில் ரோந்த... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி: இளைஞா் கைது

பெண்ணுக்கு ஆசிரியை வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.88 லட்சம் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள மூா... மேலும் பார்க்க

தேனி அருகே கஞ்சா கடத்திய மூவா் கைது

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவா், உடந்தையாக இருந்த பெண் என 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி அருகேயுள்ள க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வருஷநாடு சாலையில் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

இளைஞா் தீக்குளித்து தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் பால்பாண்டி மகன் கருப்பசாமி (29). இவரது தாய் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில்,... மேலும் பார்க்க