செய்திகள் :

நியூ யார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் பிரபல பாலிவுட் இயக்குநரின் மகன்! யார் இவர்?

post image

நியூ யார்க் மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி தேர்வாகியுள்ளார்.

இவர், சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற படங்களை இயக்கிய இந்திய - அமெரிக்க இயக்குநரான மிரா நாயரின் மகன் ஆவார்.

வருகின்ற நவம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த மேயர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியின்றி கர்டிஸ் ஸ்லிவா தேர்வு செய்யப்பட்டார்.

ஜனநாயகக் கட்சியில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் இறுதித் தேர்தல் ஜூன் 24 நடைபெற்றது. இந்த தேர்தலில், முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோ, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி, பிராட் லேண்டர் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

மொத்தம் 89 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், அதிகபட்சமாக ஜோஹ்ரான் மம்தானி 44 சதவிகிதமும், குவோமோ 36 சதவிகிதமும் வாக்குகள் பெற்றனர்.

இதையடுத்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்ற ஜோத்ரான் மம்தானி, ” நீங்கள் எனக்கு வாக்களித்திருந்தாலும், குவோமோவுக்கு வாக்களித்திருந்தாலும், நான் அனைத்து நியூயார்க் மக்களுக்கான மேயராக இருப்பேன். பெருமையுடன் இருக்கும் மேயராக இருக்க உழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?

உகண்டாவின் கம்பாலாவில் 1991 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜோஹ்ரான் மம்தானி. சலாம் பாம்பே, மான்சூன் வெட்டிங் போன்ற பிரபல திரைப்படங்களை இயக்கிய மிரா நாயர் இவரது தாயார் ஆவார். தந்தை கல்வியாளர் மஹ்மூத் மம்தானி.

தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் குழந்தௌ பருவத்தை கழித்த ஜோஹ்ரான், 7 வயதில் நியூ யார்க் நகரில் பெற்றோர்களுடன் குடிபெயர்ந்தார்.

போடோயின் கல்லூரியின் இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும்போதே ஜோஹ்ரானின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பாலஸ்தீன் நீதிக்கான மாணவர்கள் என்ற அமைப்பை நிறுவினார்.

அஸ்டோரியா மற்றும் லாங் தீவு உள்ளிட்ட நகரங்களை உள்ளடக்கிய 36-வது மாவட்டத்தின் பிரதிநிதியாக நியூ யார்க் மாகாண அவைக்கு 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிரியா நாட்டின் கலைஞர் ராமா துவாஜி என்பவரை இந்தாண்டு தொடக்கத்தில் ஜோஹ்ரான் திருமணம் செய்துகொண்டார்.

மலிவு விலை வீடுகள், பொது போக்குவரத்து மற்றும் புலம்பெயர்ந்தோர் உரிமைகள் ஆகியவற்றை தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தனது முற்போக்கு கருத்துகளால் நியூ யார்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஜோஹ்ரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

தற்போது ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், நியூ யார்க் மேயராக ஜோஹ்ரான் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நியூ யார்க் மேயராக ஜோஹ்ரான் தேர்வானால், முதல் முஸ்லிம் மற்றும் இந்திய - அமெரிக்க மேயர் என்ற வரலாறு உருவாகும்.

இதையும் படிக்க : சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!

அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!

2019ஆம் ஆண்டு இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான மேஜர் மோயிஸ் அப்பாஸ் ஷா பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும் அந்நாட்... மேலும் பார்க்க

அணுகுண்டுகளைத் தாங்கும் போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!

அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நாட்டோ அமைப்பின் மாநாட்... மேலும் பார்க்க

அமெரிக்க தாக்குதலின் வெற்றி? அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

அமெரிக்காவின் தாக்குதல்களில் தங்களது அணுசக்தி தளவாடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.மத்திய கிழக்கில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளுக்கும் இடை... மேலும் பார்க்க

ஈரான், பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! 7000 பேர் தாயகம் திரும்பினர்!

ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், அகதிகளாக வசித்த சுமார் 7000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாட... மேலும் பார்க்க

இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!

காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் நடைபெற்று வரும... மேலும் பார்க்க

இஸ்ரேல் உளவாளி மூவருக்கு ஈரானில் மரண தண்டனை!

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, அந்நாடு மீது... மேலும் பார்க்க