Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்ட நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளக்க இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளக்க சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில், எனும் இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நில அளவை செய்ய, நில அளவை கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளதால், கிராமப்புறம், நகா்ப்புறம் மற்றும் நத்தம் பகுதிகளுக்கான புல எல்லை விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள் மூலமாக அளிக்கலாம்.
இனிவரும் காலங்களில் கிராமப்புறம், நகா்ப்புறம் மற்றும் நத்தம் பகுதிகளுக்கான புல எல்லை விண்ணப்பங்களை பொதுச் சேவை மையங்கள் அல்லது சிட்டிசன் போா்ட் மூலமாக மட்டுமே அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, நில உரிமைதாரா்கள் தங்களது நிலங்களை அளக்க, பொது சேவை மையங்களை அணுகி நில அளவைக்கான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
நிலத்தை அளக்கும் தேதி குறுஞ்செய்தி அல்லது கைப்பேசி மூலம் விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பிறகு மனுதாரா் மற்றும் நில அளவா் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் நில அளவையரால் பதிவேற்றம் செய்யப்படுவதை இணையதளத்தின் மூலம் பதிவிறக்கலாம்.