செய்திகள் :

நிலைக்குலுங்கிய மியான்மர்: ஆயிரத்தைத் தாண்டிய பலி!

post image

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரதைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நேற்று(28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளும் நிலை குலுங்கியுள்ளது. பெரிய பெரிய கட்டடங்களும் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போன்று சரிந்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும், பல உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

கடும் பாதிப்பைச் சந்தித்த மியாமன்ரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,002 பேர் பலியானதாகவும், 2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும்,30-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது. இடிபாடுகளிலிருந்து தோண்டி தோண்டி உடல்கள் எடுக்கப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே மியான்மரில் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் சூழலில், இந்த நிலநடுக்கம் மேலும் வேதனைக்குள்ளாகியுள்ளது. இரு நாடுகளிலும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றது. நிலநடுக்க பகுதியில் எங்கும் மரண ஓலங்களும், அழுகை குரலுமாகக் காணப்படுகிறது. தன் குடும்பத்தினரும், தன்னுடன் இருந்தவர்களும் எங்கேயாவது ஒரு மூலையில் உயிருடன் இருக்கமாட்டார்களா என்ற கூக்குரலிட்டுக் கதறும் மக்களின் குரல்கள் மனதைப் பிளக்கும் வகையில் உள்ளது.

சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்: 200 பயணிகளுக்கு நோய் பாதிப்பு!

அமெரிக்காவில் சொகுசு கப்பலில் வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு சொகுசு பயணக் கப... மேலும் பார்க்க

இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தினார்.இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு தூதரக உறவுகளின் 75-ஆவது ஆண்டுவிழாவையொட்டி சீன அதிப... மேலும் பார்க்க

‘அணு ஆயுதம் தயாரிப்பதே ஈரானுக்கு ஒரே வழி’

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதை எதிா்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தயாரிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் முதன்மை ஆலோசக... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு வரிவிதிப்பு: டிரம்ப் இன்று அறிவிக்கிறாா்

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்புகளை அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப். 2) அறிவிக்கவுள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பின்னா், அந்நாட்டின் ... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: 2,700-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,700-ஐக் கடந்துள்ளது. இது குறித்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங் தலைநகா் நேபிடாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க