செய்திகள் :

`நீதிமன்றங்களில் அதிக குட்டுகள் வாங்கியதில் முதல் இடம்’ - திமுக அரசை விமர்சிக்கும் டாக்டர் சரவணன்

post image

கரூர் சம்பவம் சம்பந்தமாக தமிழக அரசிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தது உச்ச நீதிமன்றம். மேலும் வழக்கு விசாரணையையும் சிபிஐ-க்கு மாற்றியுள்ளது உச்ச நீதிமன்றம். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இதுகுறித்து டாக்டர் சரணவனன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி தனக்குத்தானே பெருமையாக பேசிக் கொள்கிறார்.

Udhayanidhi

ஆனால், நிர்வாக சீர்கேட்டால் கடந்த நான்கரை ஆண்டுகளில் நீதிமன்றஙகள் மூலம் இந்தியாவிலேயே அதிக அளவில் கடும் கண்டனங்களையும், அதிக குட்டுகளையும் பெற்ற அரசாக திமுக அரசு உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோலுரித்து காட்டி வருகிறார்.

டாக்டர் சரவணன்

ஏற்கனவே சனாதனத்தைப் பற்றி விமர்சித்து பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்புக்கு ஆளானார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு திமுக அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது, இப்படி பல சம்பவங்கள்.

அதுமட்டுமின்றி, கடன் வாங்கும் மாநிலங்களில் நாட்டிலேயே முதலிடம், லாக்கப் மரணங்களில் முதலிடம், போதைபொருள் நடமாட்டத்தில் முதலிடம், காங்கிரஸ்-திமுக கூட்டணி கொண்டு வந்த நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத மாணவர்களின் தற்கொலையில் முதலிடம் பெற்று தமிழகம் உள்ளது" என்றார்.

ஆந்திராவில் Google AI Hub திட்டம்; "ஆனால் நம்ம முதல்வர் இந்தியைத் தடை செய்ய முயல்கிறார்" - அண்ணாமலை

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பங்களிக்கும் அடுத்த கட்ட பாய்ச்சலாக, கூகுளின் 'Google AI hub data centre'ஐ ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் பெரிய அளவில் கட்டமைக்கத் ... மேலும் பார்க்க

`உங்கள் மீது வரி விதிப்பேன்' - பொங்கும் ட்ரம்ப்; ஓரணியில் இந்தியா, பிரேசில், சீனா? - என்ன நடக்கிறது?

அமெரிக்க கருவூல அலுவலகத்தின் லேட்டஸ்ட் தரவுகளின்படி, இந்தியா, பிரேசில், சீனா மற்றும் இன்னும் சில நாடுகள் தொடர்ந்து அமெரிக்க கருவூலப் பத்திரங்களின் இருப்புகளைக் குறைத்து வருகின்றன. இது கடந்த ஆண்டு ஜூலை... மேலும் பார்க்க

`பொண்டாட்டிகளையும் இலவசமாக தருவார்கள் என்கிறார்!’- சி.வி.சண்முகத்தை வறுத்தெடுத்த அமைச்சர் கீதா ஜீவன்

தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் தொகை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு அருவருக்கத்தக்க ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார் ... மேலும் பார்க்க

மும்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி; உணவு, தண்ணீர் இல்லாமல் 12 மணி நேரம் சிக்கிய 500 மாணவர்கள்

மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெருக்கடி இருந்து கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய சிறுவன் ஒருவன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல்: "முரணான தகவல்கள், திட்டமிட்டு செய்திருக்கின்றனர்" - பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழக சட்ட மன்றத்தில் இன்று பிறவிவாதங்களை ஒதுக்கி கரூர் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். அதை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக்கொண்டாலும் எடப்ப... மேலும் பார்க்க

டாப் 10 இடங்களில் இருந்து கீழிறங்கிய அமெரிக்க பாஸ்போர்ட்; இதுக்கு காரணமும் ட்ரம்ப் தான்!

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலின் டாப் 10 இடங்களில் இருந்து அமெரிக்காவின் பாஸ்போர்ட் கீழிறங்கியுள்ளது.சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எப்படி நிர்ணயிக்கப்படும்? குற... மேலும் பார்க்க