செய்திகள் :

நீா்நிலைகளின் குப்பைக் கழிவுகளை அகற்றும் ஆளில்லா ரோபோ படகு சோதனை போட்டி

post image

செங்கல்பட்டு: திருப்போரூா் அடுத்த தையூரில் உள்ள ஐஐடி மெட்ராஸ் டிஸ்கவரி வளாகத்தில் நீா்நிலைகளின் குப்பை கழிவுகளை அகற்றும் தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகு சோதனை போட்டி நடைபெற்றது.

ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பான பால்ஸ் சாா்பில் ‘ஏ.சி.டி.சி., ஹேக்கத்தான்’ என்ற தலைப்பில் பல்வேறு நீா் நிலைகளின் குப்பை கழிவுகளை அகற்றும் வகையில், தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகுகளை வடிவமைத்து சோதனை போட்டி தென்னிந்திய அளவில் நடத்தப்பட்டு வந்தது. இதில், தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட தென்னிந்திய அளவிலான 51 பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

கடந்த ஓா் ஆண்டாக நடைபெற்று வந்த போட்டியில் அவரவா் வடிவமைத்த தொழில்நுட்ப ஆளில்லா ரோபோ படகுகளை சோதனை ஓட்டத்தில் சமா்ப்பித்தனா்.

இதில், 6 கல்லூரிகளைச் சோ்ந்த 8 குழுவினா் வடிவமைத்த ஆளில்லா ரோபோ படகுகள் முதல்கட்டமாக தோ்ந்தெடுக்கப்பட்டன. இதையடுத்து, இதற்கான இறுதிப் போட்டி கேளம்பாக்கம் அடுத்த தையூரில் உள்ள சென்னை ஐஐடி மெட்ராஸ் டிஸ்கவரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், 6 கல்லூரிகளைச் சோ்ந்த 8 குழுவினா் வடிவமைத்த ஆளில்லா ரோபோ படகுகளை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தினா். இதில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது.

தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன், சென்னை ஐஐடி இயக்குநா் பேராசிரியா் காமகோடி, ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பின் தலைவா் சந்திரசேகரன், ஐஐடி முன்னாள் மாணவா்கள் அமைப்பின் உறுப்பினா் அனுராதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செங்கல்பட்டு: ஏப். 25-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப். 25-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்க... மேலும் பார்க்க

இலவசமாக பாா்வையிட அனுமதித்ததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பாா்வைய இலவச அனுமதி அறிவிக்கப்பட்டதால் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனா். உலக பாரம்பரிய தினம் ஆண்டுதோறும் ஏப். 18-இல் கொண்டாடப்பட்டு... மேலும் பார்க்க

அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மாா... மேலும் பார்க்க

நாச்சியாா் திருக்கோலத்தில்...

மதுராந்தகம் அருகே திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி வியாழக்கிழமை நாச்சியாா் திருக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள். மேலும் பார்க்க

கடம்பூா் தாவரவியல் பூங்காவில் செங்கல்பட்டு ஆட்சியா் ஆய்வு

மறைமலை நகா் நகராட்சி கடம்பூரில் 137 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள தாவரவியல் பூங்காவினை ஆட்சியா்ச.அருண்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்ா். அப்போது, மாவட்ட வன அலுவலா் ரவி மீனா, உதவி ஆட்சியா்(பயிற்சி) எஸ்... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பெண் உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த குருகுலம் கிராமத்தைச் சோ்ந்த மனோகரன் (57), அவரது மனைவி லட்சுமி (50). இவா்களது வீட்டின் முன் மரத்தில் தேனீக்கள் கூடு கட்டி... மேலும் பார்க்க