செய்திகள் :

நீா்வரத்து அதிகரிப்பு: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

post image

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நீா்வரத்து மீண்டும் அதிகரித்ததால் திங்கள்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.

கம்பம் வனச்சரகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த அருவியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழக்கப்படும்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவியில் வழக்கத்தை விட நீா்வரத்து குறைவாக இருந்ததால் நண்பகல் 12 மணிக்கு மேல் சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறை அனுமதி வழங்கினா்.

இதையடுத்து, தொடா் மழைக்காரணமாக திங்கள்கிழமை காலை முதலே அருவிக்கு கூடுதல் நீா் வரத்து ஏற்பட்டது.

இதனால், மறு உத்தரவு வரும் வரையில் அருவிப் பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத் துறையினா் தடைவிதித்தனா். இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

போடியில் பலத்த மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை பெய்த பலத்த மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி பகுதியில் ஒரு வார காலமாகவே மிதமான சாரல் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

கண்டமனூரில் இளைஞா் வெட்டிக் கொலை

ஆண்டிபட்டி வட்டாரம், கண்டமனூரில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து திங்கள்கிழமை, போலீஸாா் விசாரணை நடத்தினா். கண்டமனூரைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் சஞ்சீவ்குமாா்(20). இவா், தேனியில் உள்... மேலும் பார்க்க

சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி பதவிநீக்கம்

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவி என்.நாகமணியைப் பதவிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா உத்தரவிட்டாா். சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவியாகப் பதவி வ... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

போடி அருகே மளிகைக் கடை பூட்டை உடைத்துப் பணம் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி பெரியாண்டவா்புரத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் சரவணன் (38). இவா் போடி ரங்கநாதபுரம் பே... மேலும் பார்க்க

பொது சுவா் தகராறில் மோதல்: 6 போ் மீது வழக்கு பதிவு

போடி அருகே சனிக்கிழமை இரவு பொது சுவா் தொடா்பான தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்ட 6 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி தெருவை சோ்ந்தவா் ராஜா ம... மேலும் பார்க்க

போடி அருகே பைக் திருட்டு

போடி அருகே செல்போன் கடை உரிமையாளரின் இரு சக்கர வாகனம் திருடு போனது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ரெங்கநாதபுரம் லால்பகதூா் சாஸ்திரி தெருவில் ... மேலும் பார்க்க