செய்திகள் :

நெதன்யாகுவை வாழ்த்தி மோடி போன்கால்; `இனப்படுகொலை நிகழ்த்தியவரை பாராட்டுவதா?' - காங்கிரஸ் விமர்சனம்

post image

இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்தின் முதல்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக கையெழுத்தாகி உள்ளது.

மோடி - நெதன்யாகு

இதை பாராட்டி நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் போன்காலில் பேசினார் இந்திய பிரதமர் மோடி.

அது குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ட்ரம்பின் காசா அமைதி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வாழ்த்தி நான் எனது நண்பர் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசினேன்.

பணயக் கைதிகள் விடுவிப்பு மற்றும் காசா மக்களுக்கு அதிகரிக்கப்படும் மனிதநேய உதவி குறித்த ஒப்பந்தத்தை வரவேற்கிறேன்.

உலகில் எங்கேயும் எந்த வடிவத்திலும் பயங்கரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷின் விமர்சனம்

மோடியின் இந்தப் போன்கால் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "கடந்த 20 மாதங்களாக, காசாவில் இனப்படுகொலையை நிகழ்த்திய பிரதமர் நெதன்யாகுவிற்கு தகுதியில்லாத பாராட்டுகளை மோடி வழங்கியது அதிர்ச்சிக்குள்ளானது மற்றும் அவமானகரமானது" என்று தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

நேற்று மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பிடமும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி: பல்கலைக்கழக மாணவர்களை `ஷு’ காலால் தாக்கிய போலீஸார் - `லெஃப்ட் ரைட்’ வாங்கிய எம்.எல்.ஏ

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியராகப் பணியாற்றி வரும் மாதைய்யா, தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாக மாணவி ஒருவர் கதறும் ஆடியோ பு... மேலும் பார்க்க

"நாடகமாடுறீங்களா, அவருக்கு ஏதாச்சும் ஆச்சுனா தொலைச்சிடுவேன்" - ராமதாஸ் குறித்து அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இத்தகைய சூழலில், கடந்த வாரம் (அக்டோபர் ... மேலும் பார்க்க

கரூர் வழக்கு: கூட்டத்தில் சமூக விரோத கும்பல் டு விஜய்-ன் தாமதம்- உச்ச நீதிமன்றத்தில் பரபரத்த விசாரணை

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்த... மேலும் பார்க்க

Gaza: ஹமாஸ் - இஸ்ரேல் போர்; இதுவரை நடந்தது என்ன? - ட்ரம்ப்பின் அமைதி திட்டம் கைகொடுக்குமா?

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கி பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் வீசிய குண்டுகளால் காசா நகரம் மு... மேலும் பார்க்க

ட்ரம்பிற்கு 'நோ' நோபல் பரிசு; அளவிட முடியாத ஆசை, கனவு, புலம்பல் - கேட்டும் கிடைக்காமல் போனது ஏன்?

'எனக்கில்ல... எனக்கில்ல...' - இது திருவிளையாடல் படத்தில் வரும் தருமியின் பிரபல வசனம். இது தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தான் சரியாக பொருந்தும். கிட்டத்தட்ட 9 மாதங்களாக, ஆசை ஆசையாய் அவர் எதிர்பார... மேலும் பார்க்க

Nobel: ட்ரம்பிற்கு இல்லை; வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு; யார் இவர்?

இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கவில்லை. இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. அதில் 244 பெயர்கள் தனிநபர... மேலும் பார்க்க