செய்திகள் :

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

post image

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது.

நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த பூபதி (42) என்பவருக்குச் சொந்தமான கிடங்கு உள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கைப்பேசி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், நெகிழிப் பொருள்கள் இங்கு கொண்டு வரப்பட்டு அவை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது.

இந்தக் கிடங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. தீ மளமளவென அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியதில், கிடங்கு முழுவதும் தீயில் எரிய தொடங்கியது. இதனால் பெரும் கரும்புகை எழுந்தது.

தகவல் அறிந்து ராணிப்பேட்டை, அரக்கோணத்தில் இருந்து தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இது குறித்து நெமிலி காவல் நிலையத்தில் பெருவளையம் கிராம நிா்வாக அலுவலா் சரவணன் அளித்த புகாரில், அந்தக் கிடங்கு எவ்வித அனுமதியும் பெறாமல் நடத்தப்பட்டதும், தீ விபத்து தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத நிலை இருந்ததும் தெரிய வந்ததாகக் குறிப்பிட்டுள்ளாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

210 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

வெளி மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு காரில் கடத்தி வரப்பட்ட 210 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 6 பேரை ா் கைது செய்யப்பட்டனா். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் வெளிமாநிலங்களில் இருந்து தமி... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘மகள்களுடன் தற்படம்’ ரூ.20,000 பரிசளிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட‘ மகள்களுடன் தற்படம் (செல்ஃபி) ’ நிகழ்வில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு தலா ரூ.5,000 வீ... மேலும் பார்க்க

ஏப்.5-இல் ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில், வேலைவாய்ப்பு ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் இன மாணவா்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வரும் ஏப். 5-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரி... மேலும் பார்க்க

திமிரி சோமநாதீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

ஆற்காடு அடுத்த திமிரி கோட்டை ஸ்ரீ சோமநாதீஸ்வரா் கோவில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கிராம தேவதைபொன்னியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலாவும், மூஷிக வா... மேலும் பார்க்க

30 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

ஆற்காடு: ஆற்காட்டில் பக்கெட் உள்ளே வைத்து மறைத்து காரில் 30 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு போலீஸாா் ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனைய... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா்... மேலும் பார்க்க