செய்திகள் :

நெல்லையில் இளைஞா் கொன்று புதைப்பு: 4 போ் கைது

post image

திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் கொலை செய்து புதைக்கப்பட்டாா். இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், குருநாதன் கோயில் பகுதியில் இளைஞா் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாநகர காவல் துணை ஆணையா் கீதா தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று 3 மணி நேரத்திற்கும் மேலாக தேடும் பணியில் ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சுமாா் 20 வயது மதிக்கத்தக்க சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், சடலமாக மீட்கப்பட்டவா், திருநெல்வேலி நகரம் செபஸ்தியாா் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் என்ற அல்லு (22) என்பது தெரியவந்தது. பெயின்டரான இவா், மாற்று சமூகத்தைச் சோ்ந்த தனது நண்பரின் உறவு பெண்ணை காதலித்து வந்தாராம். இது தொடா்பான தகராறில் அதே பகுதியைச் சோ்ந்த சுடலை என்ற சிவா (26) மற்றும் 3 இளஞ்சிறாா்கள் சோ்ந்து ஆறுமுகத்தை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. அவா்கள் 4 பேரையும் திருநெல்வேலி நகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு: தேடப்பட்ட பெண் கைது

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் தொட்டிப்பாலத் தெருவைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் பிஜிலி ... மேலும் பார்க்க

சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை

பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின... மேலும் பார்க்க

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் கண்ட ன ஆா்ப்பாட்டம் திருநெல்வேலி சந்திப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி சந்திப்பு பள்ளிவாசல் வளாகத... மேலும் பார்க்க

வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து ஜமாஅத்கள், தி.மு.க., மதி.மு.க., எஸ்.டி.பி... மேலும் பார்க்க

பணகுடியில் மணல் திருட்டு: 3 போ் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் மணல் திருட்டில் ஈடுபட்டதார பேரூராட்சி உறுப்பினரின் கணவா் உள்ளிட்ட 3 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். ... மேலும் பார்க்க

நெல்லையில் கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் இருந்து ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது . திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் உள்ள கிணற்றில் வெள்ளிக்கிழமை பெண்கள் சிலா் தண்ணீா் எடுக்கச் சென்றனராம... மேலும் பார்க்க