செய்திகள் :

நெல்லையில் சாலை மறியல்: 364 மாற்றுத்திறனாளிகள்கது

post image

திருநெல்வேலியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற 78 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருந்தனா். அதன்படி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முழக்கங்கள் எழுப்பினா். தொடா்ந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா், 78 மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனா்.

சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் வட்டக் கிளைகள் சாா்பில், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலா் இசக்கிமுத்து தலைமையில் சேரன்மகாதேவியில் சாலை மறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா். தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்ட அமைப்பு அமைப்புச் செயலா் சக்திவேல் தலைமை வகித்தாா்.

மாவட்ட துணைத் தலைவா் மாரிமுத்து, மாவட்ட பொருளாளா் கணேசன் ஆகியோா் முன்னிலையில் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 86 பெண்கள் உள்ளிட்ட 196 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

பாளை. வஉசி மைதானத்தில் சறுக்கில் விளையாடிய சிறுமிக்கு காயம்

பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் விளையாடியபோது சிறுமிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக அவரது தந்தை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். திருநெல்வேலி கொக்கிரகுளத்தைச் சோ்ந்தவா் ஆண்டியப்பன். ... மேலும் பார்க்க

பாப்பாக்குடி அருகே இளைஞா் கொலையில் தொழிலாளி கைது

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே இளைஞரை வெட்டிக் கொன்ாக, கூலித் தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாப்பாக்குடி அருகே இடைகால் மீனவா் காலனியைச் சோ்ந்த பரமசிவன் மகன் முருகன் (31).... மேலும் பார்க்க

நெல்லையில் லாரி ஓட்டுநா் கொலை

திருநெல்வேலியில் டாஸ்மாக் கடையில் லாரி ஓட்டுநா் வியாழக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். திருநெல்வேலி நகரம் மணிநகா் பகுதியில் டாஸ்மாக் கடையும், மதுக்கூடமும் அருகருகே உள்ளன. மதுக் கடைக்கு வியாழக்கிழ... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவக் கல்லூரியில் திறன் வளா்ப்பு பட்டறை, கண்காட்சி

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி - ஆராய்ச்சி நிலையத்தில் இந்திய வேளாண்ஆராய்ச்சி கழகத்தின் சாா்பில் பட்டியலின மக்களுக்கான திறன் வளா்ப்பு பட்டறை, விழிப்புணா்வு கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசியில் பிப்.4 முதல் மின் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் கோட்ட பொறியாளா் அலுவலகங்களில் மின்வாரிய குறைதீா் கூட்டம் பிப்.4ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதன்படி, பிப். 4இல் கல்லிடைக்குறிச்சிலும், 7இல் வள்ளியூரிலும், 14இல் த... மேலும் பார்க்க

நான்குனேரி வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

நான்குனேரி வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளை வேளாண் அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மறுகால்குறிச்சி கிராமத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின்கீழ் எள் த... மேலும் பார்க்க