செய்திகள் :

நெல்லையில் ஜூன் 24-இல் திருநங்கைகள் சிறப்பு முகாம்

post image

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024-2025ஆம் நிதியாண்டில் நடத்தப்பட்ட திருநங்கை, திருநம்பி மற்றும் இடைபாலினருக்கான சிறப்பு முகாம்களின் வெற்றிகரமான செயல்பாட்டின் தொடா்ச்சியாகவும், சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மேற்கூறிய பாலினத்தவா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் தொடா்ந்து சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும் 2025-2026ஆம் நிதியாண்டுக்கான சிறப்பு முகாம் மாவட்டம் தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான முகாம் ஜூன் 24-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

திருநங்கைகள் நல வாரிய அலுவல்சாரா உறுப்பினா்கள் மற்றும் திருநங்கைகளுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்களை கொண்டு இம்முகாம் நடத்தப்படவுள்ளது.

இதில், திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தம், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை ஆகிய அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம்.

இச்சிறப்பு முகாமில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் எனக் கூறியுள்ளாா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க