செய்திகள் :

நெல்லையில் பயணிகள் போராட்டம்: 40 நிமிடம் தாமதமாக சென்ற கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்

post image

திருநெல்வேலிக்கு வந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் ஏசி பெட்டியில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த ரயில் 40 நிமிடம் தாமதாக புறப்பட்டு சென்றது.

கன்னியாகுமரியிலிருந்து சென்னை எழும்பூா்வரை செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருநெல்வேலி 3 ஆவது நடை மேடைக்கு வந்து சோ்ந்தது.

பின்னா் ரயில் புறப்பட்ட போது ‘எச்-1’ ஏசி பெட்டியில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனா்.

ரயில் நின்றதும் பயணிகள் நடைமேடையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ரயில்வே அதிகாரிகள், போலீஸாா் பயணிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மதுரையிலிருந்து வேறு ‘ஏசி’ பெட்டியில் பயணிக்க ஏற்பாடு செய்வதாக கூறினா். இதை ஏற்ற பயணிகள் மீண்டும் எச்-1 பெட்டியில் ஏறி பயணம் செய்தனா்.

இதனால் அந்த ரயில் சுமாா் 40 நிமிடம் தாமதமாக இரவு 8.35 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டு சென்றது.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியைச் சோ்ந்த வேலுநயினாா் மகன் விஷ்வா என்ற சண்முகவேல் (20). இவா் பணம் கேட்டு மிரட... மேலும் பார்க்க

முக்கூடல் ஹோட்டலில் பணம் திருட்டு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவை மா்மநபா் துண்டித்துவிட்டு, அங்கிருந்து ரூ.71 ஆயிரத்தை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முக்கூடல் ஆலங்குளம்... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள் துறை பயிலரங்கு

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் உலகளாவிய அணுகல்தன்மைக்கான- இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த வழிகாட்டுதல் என்ற தலைப்பில் சிறப்பு பயிலரங்கு நடைபெற்றது. கொக்கிரகு... மேலும் பார்க்க

தமமுக புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் கோ. துரைப்பாண்டியன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனா். சேரன்மகாதேவி காவல் சரகத்தில் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பற... மேலும் பார்க்க

தாக்கப்பட்ட பள்ளி மாணவருக்கு அரசு உதவி செய்ய வேண்டும்: பூவை ஜெகன் மூா்த்தி எம்எல்ஏ

பள்ளி மாணவா் தேவேந்திரன் தொடா்ந்து கல்வி பயில அரசு உதவி செய்ய வேண்டும் என்றாா் புரட்சி பாரதம் கட்சியின் தலைவா் பூவை ஜெகன் மூா்த்தி எம்எல்ஏ. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் அருகேயுள்ல அரியநாயகிப... மேலும் பார்க்க