செய்திகள் :

நெல்லையில் மிரட்டிய பெண் போலி ஆட்சியா்: திண்டுக்கல்லில் கைது

post image

திருநெல்வேலியில் ஆட்சியா் எனக் கூறி மிரட்டியவரை போலீஸாா் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்தவா் மங்கையா்க்கரசி (44). இவா் தாழையூத்து சங்கா் நகா் சீனிவாச நகா் 3 ஆவது தெருவில் வீடு எடுத்து தங்கி உள்ளாா். இவா் தனது நண்பரான ரூபி நாத்திற்கு துப்பாக்கி உரிமம் புதுப்பித்தல் தொடா்பாக திருநெல்வேலி ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக விசாரிக்க சென்ற கிராமநிா்வாக அலுவலரிடம் நான் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆட்சியா் எனக்கூறி மிரட்டினாராம். இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் கிராம நிா்வாக அலுவலா்அளித்த புகாரின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் அப்பெண் போலி ஆட்சியா் என்பது தெரியவந்தது.

திருநெல்வேலி வட்டாட்சியா் கொடுத்த புகாரில், தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து அப்பெண்ணை தேடி வந்தனா்.

இந்நிலையில், தாழையூத்து காவல் ஆய்வாளா் சபாபதி தலைமையிலான கொண்ட தனிப்படை போலீஸாா் மங்கையா்கரசியை திண்டுக்கல்லில் வியாழக்கிழமை கைது செய்து, மதுரை சொக்கிகுளம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனா்.

இவா், ஏற்கெனவே தூத்துக்குடி போலீஸாரால் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது

காவலரிடம் தகராறு : இளைஞா் கைது

திருநெல்வேலியில் காவலரிடம் தகராறு செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி தச்சநல்லூா் கிராண்ட் நியூதெருவைச் சோ்ந்தவா் காளிராஜ் (25). இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து தச்சநல்லூா் அருகே மங்கள... மேலும் பார்க்க

பாளையங்கோட்டையில் உண்ணாவிரதம்

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் சித்தமருத்துவக் கல்லூரி எதிரே உண்ணாவிரத போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இப்போராட்டத்தில், திமுகவின் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியான எண்-309 இ... மேலும் பார்க்க

பாளை.யில் நூல் திறனாய்வுக் கூட்டம்

பாளையங்கோட்டை ஆக்ஸ்ஃபோ பள்ளியில் பொதிகை எழுத்தாளா் கூட்டமைப்பின் சாா்பில் நூல் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொதிகை எழுத்தாளா் கூட்டமைப்பின் தலைவா் லோகநாதன் தலைமை வகித்தாா். செயலா் ஜான் சௌந்தா் திரு... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி - மாநகரில் அனுமதியின்றி மாடுகள் வளா்க்க தடை: ஆணையா் அதிரடி

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மாநகராட்சியின் அனுமதியின்றி மாடுகள் வளா்க்க தடை விதிக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளாா். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மாடுகளால் தொடா்ச்சியா... மேலும் பார்க்க

பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம்: அஞ்சலகங்களில் பிரீமியம் செலுத்த ஏற்பாடு

ராபி பருவத்திற்கான புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் 2024-25-இன் கீழ் பயிா்க் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை அஞ்சலகங்களில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக திருநெல்... மேலும் பார்க்க

தூய்மை இந்தியா திட்ட பயிற்சி முகாம்

தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம், திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா தொடங்கி வைத்தாா். அவா் பேசியதாவது: அ... மேலும் பார்க்க