செய்திகள் :

நெல்லை தனியார் பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடல்

post image

நெல்லையில் இயங்கி வந்த தனியாா் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது விவகாரத்தில் மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் விசாரணை நடத்திய நிலையில், பயிற்சி மையத்தின் விடுதிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

திருநெல்வேலியில் தனியாா் நீட் பயிற்சி மையத்தில் உள்ள மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் தாக்கியது தொடா்பான விடியோ குறித்து கடந்த வாரம் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில், பயிற்சி மையம் பதிவு பெறாமல் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதன் மாணவ, மாணவிகள் விடுதி மூடப்பட்டு, அதில் தங்கிப் படித்து வந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் கண்ணதாசன் வெள்ளிக்கிழமை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிட விசாரணை நடத்தியிருந்தார்.

தனியாா் நீட் பயிற்சி மையத்தில் மாணவா்களை பயிற்சி ஆசிரியா்கள் பிரம்புகளைக் கொண்டு கடுமையாக தாக்குவது, காலணியை எடுத்து மாணவிகள் மீது வீசுவது போன்ற விடியோ காட்சி வெளியாகியிருந்தது.

இதையடுத்து இந்த மையத்துக்குச் சென்று ஆய்வு செய்து, விசாரணை நடத்திய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், இந்த மையத்தில் 80 மாணவா்கள் படித்து வருகின்றனா். இதில் ஏராளமான மாணவா்களை தாக்கியுள்ளனா். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளனா். மேலும், 2 சிறாா்களையும் தாக்கியுள்ளனா். இந்த மனித உரிமை மீறல் சம்பவத்தை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.

இதுகுறித்து விசாரித்து ஆணையத்துக்கு அறிக்கை அளிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கை வந்த பின் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மறைந்த முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை! -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மறைந்த முரசொலி செல்வம் படத் திறப்பு விழா திங்கள்கிழமை(அக்.21) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முரசொலி செல்வத்தின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.அதனைத்தொடர்ந்து மேடைய... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மக்களுக்கு தமிழக அரசு விடுத்த வேண்டுகோள்

விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழக மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும் பார்க்க

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்ஃபான்!

தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் விடியோவை வெளியிட்டு யூடியூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில நாள்களுக்கு முன்னதாக பெண... மேலும் பார்க்க

நாவரசு கொலை: ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன்

சென்னை: மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் நாவரசு கொலை செய்ய... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்றிரவு 7 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.மேலும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்பட 10 மாவட்டங்களில் லேசா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் அதிகம் சிக்கிய அதிகாரிகள்.. எந்தத் துறையைச் சேர்ந்தவர்கள்?

தமிழகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில், லஞ்சம் வாங்கி வழக்கில் சிக்கயி அதிகாரிகளை அதிகம் கொண்ட துறையாக ஊரக வளர்ச்சித் துறை இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் இயங்கும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு ... மேலும் பார்க்க