செய்திகள் :

நொய்டாவில் ரூ.30 கோடிக்கு வீடு வாங்கிய அர்னாப் கோஸ்வாமி!

post image

தனியார் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியரான அர்னாப் கோஸ்வாமி, நொய்டாவில் 10,000 சதுர அடியில் வீடு ஒன்றை ரூ.30 கோடிக்கு வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனியார் செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, நொய்டாவில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியிருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதாவது, அவர் வாங்கியிருக்கும் சொத்து 10 ஆயிரம் சதுர அடிகொண்டது என்பதால், அந்த சொத்தை அவர் ஒரு சதுர அடிக்கு ரூ.30 ஆயிரம் என்ற மதிப்பில் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சமூகப்பதிவுக்கு நெட்டிசன்களிடம் இருந்து இருவித கலவையான கருத்துகள் வந்துள்ளன. சிலரோ ரூ.30 கோடி வீடு வாங்கியதற்கு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அதாவது, பல ஆண்டுகளாக கடினமாக உழைத்த பிறகு அவர் அதற்கு தகுதியானவர் என்று கூறியிருக்கிறார்கள்.

ஆனால், மேலும் சிலர், இதற்குக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்கள். அவர் இந்த வீட்டை யாரிடமிருந்தாவது பரிசாகக் கூட பெற்றிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

விஷால் பார்கவா என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அர்னாப் கோஸ்வாமி நொய்டாவின் மிகப்பெரிய சொத்து ஒன்றை ரூ.30 கோடிக்கு வாங்குகிறார். இது அவருக்கு சிறிய தொகைதான். இது இந்தத் துறையில் இருக்கும் மிகச் சிறந்த ஊடகவியலாளர்களின் எழுதப்படாத சொத்து மதிப்புகளின் எல்லையை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிலர், அவருக்கு மிகச் செழிப்பான ஒரு வீடு கிடைத்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி என்று வாழ்த்தியும் வருகிறார்கள்.

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. மாணவர் தற்கொலை! ஓராண்டில் 3-வது சம்பவம்!

கான்பூர் ஐஐடியில் பி.எச்டி. பயிலும் மாணவர் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.நொய்டாவைச் சேர்ந்த அங்கித் யாதவ்(வயது 24) என்ற இளைஞர் கான்பூர் ஐஐடியில் வேதியியல் துறையில் பி.எச்டி. ஆராய்ச்சி... மேலும் பார்க்க

தில்லி தோல்விக்குப் பிறகு... கேஜரிவாலை சந்திக்கிறார் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங் சந்திக்கவுள்ளார். இதற்காக பஞ்சாபில் இருந்து தில்லிக்கு அவர் புறப்பட்டுள்ளார். மேலும் பார்க்க

உலகளாவிய மேம்பாடுகள் குறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சருடன் ஆலோசனை!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேன் நோயல் பாரோட்டை நேரில் சந்தித்தார். இதில், செய்யறிவு, புதிய கண்டுபிடிப்புகள், பிராந்திய மற்றும் சர்வதேச மேம்பாடுகள் எ... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஹெலிகாப்டர் சேவை! கட்டணம் ரூ.35,000

மகா கும்பமேளாவில் வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஹெலிகாப்டர் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் விமான நிலையத்தில் இருந்து இருந்து திரிவேணி சங்கமத்தின் பின்புறத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்... மேலும் பார்க்க

ஏஐ உச்சி மாநாடு: மோடி, ஜே.டி. வான்ஸை வரவேற்ற பிரான்ஸ் அதிபர்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நடவடிக்கைகள் சாா்ந்த சா்வதேச மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியையும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸையும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் வரவேற்றார். மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை அதிரவைத்த ‘மோடி’ முழக்கம்!

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இரு அவை அலுவல்கள் திங்கள்கிழமை தொடங்கியபோது தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் அக்கட்சி எம்.பி.க்கள் ‘மோடி’, ‘மோடி’ என முழுக்கமிட்டனா்... மேலும் பார்க்க