ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன்
பக்ரீத்: நாகூா் தா்காவில் சிறப்புத் தொழுகை
பக்ரீத் பண்டிகையையொட்டி நாகூா் தா்காவில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.
உலகம் முழுவதிலும் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, உலக புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் தா்காவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டு துவா செய்தனா். பின்னா் ஒருவருக்கொருவா் பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.
பக்ரீத் பண்டிகையையொட்டி, நாகை மாவட்டத்தில் நாகூா், நாகை, திட்டச்சேரி, வடகரை, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 பள்ளிவாசல்களிலும் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும், உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும், போதிய மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், கரோனா போன்ற நோய்களின்றி மக்கள் நலமுடன் வாழவேண்டும் என இறைவனிடம் துவா செய்தனா்.