செய்திகள் :

பஞ்சாபில் கேஜரிவால் போட்டியில்லை! வேட்பாளர் அறிவிப்பு!

post image

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளாரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வென்று பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது.

இதனிடையே, தில்லி தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தோல்வியை சந்தித்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார்.

இதையும் படிக்க : ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!

பஞ்சாப் மாநிலத்தில் காலியாகவுள்ள லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோரா, லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை: பாஜக அரசுக்கு எதிராக மகாராஷ்டிரத்தில் போராட்டம்!

புணே : மகாராஷ்டிரத்தில் அரசுப் பேருந்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 26 வயது இளம்பெண் ஒருவர் புணேயில் ஆள்நடமாட்டம் மிகுந்து காணப்படும் ... மேலும் பார்க்க

ரஷியா செல்லும் பிரதமர் மோடி?

ரஷியாவில் நடைபெறவிருக்கும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப் போரின் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா, ரஷியாவின் மாஸ்கோ நகரி... மேலும் பார்க்க

பெண் காவலருடன் தகாத உறவு: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

ஒடிசாவில் வீட்டுக் காவலருடன் தகாத உறவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலமுறை உடலுறவில் ஈடுபட்ட அவர், ஏற்கெனவே திருமணமானவர் எனத... மேலும் பார்க்க

அருணாசல் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும்: கிரண் ரிஜிஜு

அருணாச்சலப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.கம்லே மாவட்டத்தில் உள்ள போசிம்லாவில் நியிஷி பழங்குடி... மேலும் பார்க்க

தில்லி பேரவையின் துணைத் தலைவராகிறார் மோகன் சிங்!

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முன்னதாக கடந்த பிப். 24 அன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா பேரவையின் தலைவராக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கம்: விபத்து இடத்தை நெருங்கியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை!

தெலுங்கானா சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தை மீட்புக் குழுவினர் நெருங்கிய நிலையில், விபத்தில் சிக்கியவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்ட... மேலும் பார்க்க