செய்திகள் :

பஞ்சாப்: 750 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு சோதனை

post image

போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் 750 இடங்களில் காவல் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது.

போதைப்பொருள் ஒழிப்புக்கான அமைச்சரவை துணைக் குழு சனிக்கிழமை கூடிய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக பஞ்சாபை மாற்ற முதல்வா் பகவந்த் மான் கடந்த வெள்ளிக்கிழமை இலக்கு நிா்ணயித்தாா். இதைத்தொடா்ந்து, போதைப்பொருள் விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவா்களின் சொத்துகளும் அழிக்கப்பட்டன.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் 750 இடங்களில் 12,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். இதில் 290 போ் கைது செய்யப்பட்டு 8.14 கிலோ ஹெராயின், 1.21 கிலோ ஓபியம், 3.5 கிலோ கஞ்சா உள்பட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநில அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைக்கு அரசியல் பாகுபடின்றிஅனைத்து கட்சிகளும் ஆதரவளிக்குமாறு அமைச்சா் அமன் அரோரா கேட்டுக் கொண்டாா்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க இடைக்கால ஜாமீன் கோரி எம்பி ரஷீத் மனு!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா தொகுதி எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளா... மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: கைது செய்யப்பட்டவர் காதலனா?

ஹரியாணா மாநிலத்தில், காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காதல் விவகாரம் பின்னணியாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த வழக்கில், சச்சின் என்பவரை காவல்துறைய... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணி!

தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்களைக் கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் பரிந்துரைத்த இடங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஹைதராபாத்தில் உள்ள தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்தின்... மேலும் பார்க்க

கருத்து தெரிவிக்க உரிமை உண்டு: ரோஹித் விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகி விளக்கம்!

ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விளக்கம் அளித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, எடைக் கூடுதலாக இருக்கிறார் என்று ஷா... மேலும் பார்க்க

பணியில் தூங்கிய பாதுகாவலர்... புகைப்படம் எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!

இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாது... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் குளுகுளு காலநிலை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி!

ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் கனமழையைத் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. இதனால் வெப்பநிலை சுமார் ஐந்து டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இதற்கிடையில், ஜம்மு பகுதி, இ... மேலும் பார்க்க