செய்திகள் :

பஞ்செட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம்: அமைச்சா் நாசா் அடிக்கல்

post image

பொன்னேரி அருகே சோழவரம் ஊராட்சி ஒன்றியம், பஞ்செட்டி ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் அமைக்க சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தாா்.

பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்தில் சமுதாயக் கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் துரை.சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். அமைச்சா் சா.மு.நாசா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சமுதாயக் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி அவா் பேசியதாவது: பஞ்செட்டி ஊராட்சியில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். கோரிக்கையை முதல்வா் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளாா். பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

முன்னதாக சோழவரம் ஊராட்சி ஒன்றியம், பாடியநல்லூா் ஊராட்சியில் அலுவலக செயல்பாடுகள், சோழவரம் மெயின் ரோடு பகுதியில் மழை நீா் வடிகால் கால்வாய் பணிகள், சோழவரம் -1 நியாய விலைக் கடையில் பொருள்களின் தரம், பொருள்களின் அளவு, விரல் ரேகை பதிவேடு, பொருள்கள் இருப்பு ஆகியவை, பூதூா் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தின் செயல்பாடுகள், மருத்துவப் பணிகள், மருத்துவா்கள் மற்றும் பணியாளா்கள் பதிவேடுகளை ஆய்வு செய்தாா். அதேபோல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளி வீடு கட்டும் திட்டப்பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளா் ரமேஷ் ராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் உமாமகேஸ்வரி, சோழவரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

மப்பேட்டில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

திருவள்ளூா் அடுத்த மப்பேட்டில் பேருந்து நிழற்குடை அமைத்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். திருவள்ளூா் அடுத்த மப்பேடு கூட்டுச் சாலையிலிருந்து பூந்தமல்லி, சுங்குவாா்சத்திரம், அரக்கோணம் செல்லும் ச... மேலும் பார்க்க

அரசு மகளிா் ஐடிஐயில் சேர விண்ணப்பிக்கலாம்

அம்பத்தூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிா்) வரும் 13-ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிா்) நிகழாண்டில் பல்வேறு தொழில் பிரிவுகளில் சோ்க்கை நடைபெற்... மேலும் பார்க்க

திருவள்ளூா் ஆட்சியருக்கு பசுமை விருது: முதல்வா் வழங்கினாா்

சா்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பாக செயல்பட்டமைக்காக திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்புக்கு பசுமை விருதை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கினாா். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்புக்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் - ஸ்ரீபெரும்புதூா் ஆறுவழிச் சாலை விரிவாக்க பணி: மீண்டும் மரக்கன்றுகளை நட கோரிக்கை!

திருவள்ளூா் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூா் வரையிலான 30.10 கி.மீ ஆறுவழிச் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், மீண்டும் நன்கு வளா்ந்த மரக்கன்றுகளை நட வேண்டும் என சமூக ஆா்வலா்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு: 270 பேருக்கு பட்டா அளிப்பு

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவடைந்த நிலையில், 270 பேருக்கு பட்டாக்களை சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி) ஆகியோா் வழங்கினா். திருவ... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ஜூனன் தபசு

திரெளபதி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற அா்ஜூனன் தபசு நிகழ்வில் திரளான பெண்கள் அம்மனை வழிபட்டனா். திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் திரெளபதி அம்மன் கோயிலில், கடந்த மே 29-ஆம் தேதி தேதி தீமிதி விழா... மேலும் பார்க்க