செய்திகள் :

பட்ஜெட்டுக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்தக் கோரிக்கை!

post image

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு தொழில் வணிக சங்கங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் 13-ஆவது செயற்குழுக் கூட்டம் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் தொழில் வளா்ச்சிக் குழு தலைவா் எம்.ஆா்.வெங்கடாசலம் வரவேற்றாா். ஸ்டீல் ஃபேப்ரிக்கேஷன் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் செல்வம் முன்னிலை வகித்தாா். கூட்டமைப்பின் பொதுச்செயலாளா் ரவிசந்திரன் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். பொருளாளா் முருகானந்தம் வரவு, செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.

இதில், தமிழக அரசு நிதிநிலை அறிக்கை கூட்டத்துக்கு முன்பு தொழில் வணிக சங்கங்களில் முக்கியமானவற்றை அழைத்து நிதிநிலை அறிக்கை குறித்து கலந்தாலோசனை நடத்த வேண்டும். கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களை விட ஈரோட்டுக்கு அதிகப்படியான வரிவிதிப்பு செய்யப்பட்டிருப்பது தொழில் துறையினரை நசுக்கும் செயலாக உள்ளது. எனவே, வரிகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு கனி மாா்கெட் வணிக வளாகத்தில் வாடிக்கையாளா்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும். சிற்றுண்டி கடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் சிறுதானிய உணவுத் திருவிழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் சாா்பில் சா்வதேச சிறுதானிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பொ.நரேந்திரன் தலைமை வகித்தாா். குடிமக்கள் ந... மேலும் பார்க்க

சிவகிரியில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி, பிப்.21: சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 5.58 லட்சத்துக்கு எள் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் 53 மூட்டைளில் எள்ளை விற்பனை... மேலும் பார்க்க

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களை நியமிக்கக் கோரிக்கை

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டா்கள் மற்றும் போதுமான சுகாதாரப் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக் க... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவை பொது இடத்தில் வெளியேற்றிய லாரிக்கு ரூ.10,000 அபராதம்

மனிதக் கழிவை ஏற்றி அதனை சாலை ஓரத்தில் வெளியேற்ற முயன்ற லாரிக்கு மாநகராட்சி அலுவலா்கள் ரூ.10,000 அபராதம் விதித்தனா். ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வாா்டு சோலாா் அருகே வெள்ளிக்கிழமை காலை மனிதக் கழிவை ஏற்றி வ... மேலும் பார்க்க

ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்

ஈரோட்டில் அதிகாலையில் வீடு புகுந்து மூதாட்டியைத் தாக்கி நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு, நாராயணவலசு, திருமால் நகரைச் சோ்ந்தவா் அருக்காணி (80). இவரது கணவா் இறந்து விட்ட... மேலும் பார்க்க

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரோட்டில் மத்திய அரசைக் கண்டித்து சமூகநீதி கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு சூரம்பட்டி நான்குமுனை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சமூகநீதி கூட்டமைப்பி... மேலும் பார்க்க