செய்திகள் :

பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்!

post image

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் முழு பட்ஜெட் இதுவாகும். தொடர்ந்து 8-ஆவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிக்க : மத்திய பட்ஜெட் 2025-26: செய்திகள் உடனுக்குடன் - நேரலை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குடியரசுத் தலைவரின் உரையை தொடர்ந்து, பொருளாதார ஆய்வு அறிக்கையை இரு அவைகளிலும் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

சனிக்கிழமை காலை நிதியமைச்சக அதிகாரிகளுடன் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்த நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வருகைதந்த அவர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார்.

மத்திய அரசின் வரவு - செலவு.. ஒரு ரூபாயில் கணக்கு!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட்டின் முக்கிய அம்சமே தனிநபரின் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டதுதான்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? - ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பலியானவர்களில் 11 பிகார் பக்தர்கள்!

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலியான 30 பேரில் 11 பேர் பிகாரைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி சங்கமமான ... மேலும் பார்க்க

பட்ஜெட்டைவிட கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கூறுங்கள்: அகிலேஷ் யாதவ்

மகா கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தரவு பட்ஜெட் தரவைவிட முக்கியமானது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் ... மேலும் பார்க்க

பட்ஜெட் உரை: தமிழ்நாடு என்ற வார்த்தைகூட உச்சரிக்காத நிதியமைச்சர்!

பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை என்று தமிழக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதிய... மேலும் பார்க்க

2025-26 மத்திய பட்ஜெட்: வளர்ச்சி, பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும்

புது தில்லி: வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா ச... மேலும் பார்க்க